Thursday 6 March 2014

மனுஷி அல்ல ...... மனிதன் !!!. A சிறுகதை , "உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் கொள்ளக் கூடாத உணர்வுபூர்வமான கதை!"

"பெண்ணீயவாதிகள் எல்லாம் பெரும்பாலும்.... பார்க்க சுமார் மூஞ்சி குமாரிகளாகத் தான் இருப்பாங்க", என்று வாதாபி சொன்ன போது பிங்களனுக்கு துணுக்கென்றது.மேற்படி ஒரு வாக்கியத்தில் யார் பெண்ணாதரவாளி .... பெண் எதிர்ப்பாளி என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.ஆதரிப்பவனுக்கு ....பெண் என்றாலே ...அழகு என்றுஎண்ணுபவன் .பெண்ணீய ...தைரியமும் திமிருமே....ஒரு தனி அழகை கொடுக்க வல்லது என்று கருதுபவன்.ஆணீயவாதியோ ..அடுத்த அஸ்திரமாக...தங்களுடைய இந்த 'சுமார்'ரினால் ஏற்பட்ட பாதிப்பின் எதிரொலி தான் இந்த பெண்ணீய படையெடுப்புகள் என்று எய்த ஆரம்பித்தான் .இந்தக் கரு(ம)த்தை மறுக்க யோசனை செய்வதற்குள் ...தன்னுடைய நிறுத்தம் வந்து விட்டதால் ....தலையசைத்து விடைபெற்று ....பேருந்தை விட்டு இறங்கிவிட்டான் ஆதரவாளி.

வீட்டையடைந்ததுமே..... கூகுளார் துணையுடன் தன் பெண்ணீய ஆதரவுக்கு கருத்துத் தீனி தேட ஆரம்பித்தான் .... பல விஷயங்கள் கொட்ட ஆரம்பித்த போது தான் அந்த விபரீதமும் நடந்து விட்டது !காம லீலைக் காணொளிகள் அடங்கிய சில இணைப்புகளும் வந்து தொலைத்து விட்டன....பெண் சிறப்புகளைத் தேடும் படலத்தில் ! சரி தான் , ஒன்றைப் பார்த்து விட்டு ....அடுத்த கருத்துத் தேடலில் ஈடுபடுவோம் என்று காணொளிக்கான சுட்டிகளை தட்ட ஆரம்பித்தான்......... இருபதாவது வீடியோவைப் பார்க்கும் போது தான்....ஒரு விஷயம் அவனுக்கு புரிய ஆரம்பித்தது ! கருவியை மறைத்து வைத்து எடுக்கப்படும் உடலுறவு காட்சிகளில் .....சொல்லி வைத்தது போல .... ஒரே மாதிரியான விஷயங்களைத் தான் பெரும்பான்மையான பெண்கள் செய்கிறார்கள்! வேண்டாம் என்று மறுக்கும் வாய்மொழியும்....அதற்கு நேரெதிரான உடற்மொழியும்.யாரும் இல்லை ....எதுவும் இல்லை என்ற தைரியத்தில் துணிந்து விடும் பலர்..... உச்சக் கட்டத்தில் யாரோ பார்க்கிறார் .... பதிவும் செய்யப்படுகிறது என்று தெரிந்தும் ... கண்டுங் காணாமல் .... சிருஷ்டி சூழ்ச்சியின் மயக்கத்திலேயே !

ஆனால் இங்கு தான் இந்த ஆணின் (கு)யுக்தியைப் பார்க்க வேண்டும் .ஆரம்பக் கட்டமோ.....உச்சக் கட்டமோ......இயக்கத்தில் இருந்துக் கொண்டே ....மிக நிதானமாக......செல் பேசி அல்லது புகைப்படக் கருவியை ...சோதிப்பது......கோணம் மாறி இருந்தால் சரியாக வைப்பது....ஆரோகணித்த பெண்ணுக்கு இது தெரியாமலிருக்க ...திசை மாற்றி ...பேசி செயல்படுவது ..... இதையெல்லாம் பார்க்கும் போது தான் .... ஆண்களின் ஆதிக்க வெ(ற்)றி?? தொடர்வது குறித்தான பதில் கிடைப்பது போலத் தோன்றியது பிங்களனுக்கு !

பெண் உணர்வால் வாழ்கிறாள்....ஆண் உடலால் வாழ்கிறான் ! உடலைக் கட்டுக்குள் கொண்டு வந்து உணர்வைக் கொல்கிறான் ஆண்.உணர்வுக்கு ஆட்பட்டு .... அதாவது,மரியாதை செய்து ..... உடலைக் கொல்கிறாள் பெண் ! இனி பெண் ஆதரவும் வேண்டாம் ....பெண் ஈயப் பித்தளை ,சொம்பும் வேண்டாம்.......தேவதை என்று ஏற்றவும் வேண்டாம் ..... தறுதலை என்று தூற்றவும் வேண்டாம்.நீ ....என்னைப் போன்றதொரு சக மனுஷி.....இல்லை ...இல்லை ...இந்த வார்த்தையே தவறு.....சக மனிதன் நீ.காலங்காலமாக ...மனிதன் என்றாலே ஆணை மட்டுமே எண்ணும் சமூகமல்லவா நாம்....இனி இந்த தனிமைப் படுத்தல் வேண்டாம்.....தனித்தனி கழிவறைகள் கூட வேண்டாம்.ஒன்றுபடுவோம் ..... பேதமையின்றி மேதமையாவோம் ! சுமக்கும் தாய் போல ஆகு....அதே சமயம் .... போருக்குத் துரத்திய அன்னையாகவும் !

காதலின் உச்சத்தில்.....இவன் தான் நமக்கு என்று முடிவெடுத்தப் பெண்ணைக் கவனித்திருக்கிறீர்களா...?... காதலனைத் தவிர்த்து ..... ஏனையோரை ஒரு சிறிதும் கவனம் எடுத்துக் கொள்ள மாட்டாள்.....இன்னும் சொல்லப் போனால் சற்றே விட்டேற்றியாகவும் கூட ...... அந்த ....அந்த ...குறிப்பிட்ட மனநிலையை ..... காதல்,காதலன் இல்லாத போது கூட......இவையிரண்டும் இருந்தாலும் இல்லாதது போல ...மனதில் இருத்திக் கொள்ளல் வேண்டும் ! இந்த சூத்திரம் அறிந்த பெண்களே .... 'பெண்கள் பேராற்றல் மிக்கவள் ஆனது இங்கனம்'.., என்று எழுதலாம்.
அந்தக் கானொளியில் அரிதிலும் ...அரிதாக ...ஓரிரு பெண்கள் மட்டும் .... மிக கவனத்துடன்.....தன் உடல்,முகம் தெரியாமல் காத்தது..... அப்படியும் மீறி நடக்கும் சமயங்களில் ....அவனையும் சேர்த்து படம் பிடிப்பது , 'அந்த நேரத்தில்' கூட ... சாதுர்யமாக இயக்கிய ஒருவனின் கருவியை பிடுங்கி சிதறடித்தத்தையும் பார்த்த பின்பு தான் மேற்கண்ட பாராக்கள் கருத்துக்களானது பிங்களனுக்கு !இனி வாதாபியுடன் வாதிடாமல் ஆக்கப் பூர்வ நடவடிக்கையாக ...நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டுமென்று இவன் முடிவெடுத்த போது.....வாதாபியும் இதனையொத்த முடிவிற்கு வந்திருந்தான்.

பெண்ணீய ஆதரவாளர்கள் ..பெண்மையுடன் இருக்க வேண்டியதில்லை என்கிற இலக்கணத்திற்கேற்ப....பெண் எதிர்ப்பாளனாகிய வாதாபி ...சற்றே மென்மையான ....பழத் தோற்றத்துடன் இருப்பான் என்பதையும் பெரிதாக நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் பேருந்தை விட்டு இறங்கி.... விடுதிக்கு நடந்து செல்லும் வழியில் ஒரு ஆட்டோ மூன்று பேருடன் வந்து...வலுக்கட்டாயமாக ஏற்றி .... எடுத்துக் கொண்டு சென்றது இவனை ! இரண்டு முறைக்கும் மேலே....மார்ப்பிலும் ..... கால்சட்டை உள்ளேயும் பல கைகள் துழாவும் போது தான் ...இது வெறும் வழிப்பறி மட்டும் இல்லை ... வலிப் பறியும் கூட என்று புரிந்தது.கைகளிலும் ...வாய்களிலும் திணிக்கப்பட்ட உறுப்புகளின் ஆங்காரத்திற்கு பதில் சொல்ல வேண்டியதாயிற்று.....ஏனெனில் ....எதிர்ப்பு காட்டாத மௌனத்திற்கே ... பல முறை அடி பட்டாயிற்று. திருட்டு , தாக்குதல் என்றால் கூட சற்றே எதிர்வினை காட்டி இருக்கலாம்....ஆனால் இது புது மாதிரியாக இருக்கிறதே.....அரசல் புரசலாக கேள்விப்பட்ட விஷயம் தனக்கே நடந்தேறும் போது....???

இப்படியே போனால் கூட போய் தொலைகிறது .....மேற்கொண்டு எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று மனதிற்குள்ளேயே வேண்டிக் கொண்டான்.....கூட்டம் மிகுந்த பொது இடங்களில் கசங்கும் பெண்ணின் நிலை போல உணர்ந்தான்.....மெல்ல ...மெல்ல .... பெண்ணின் குமுறல்கள் புரிய ஆரம்பித்தது.வாயில் 'விட்டிருந்ததால்' .... கண்களாலேயே மன்றாடினான் . ஆனாலும் அவர்கள் ஆடி ...ஆட்டிக் கொண்டே இருந்தார்கள் ..... இறுதி ஆட்டத்தையும் நெருங்கினார்கள்.
முன்பொரு சமயம் ,யாரோ ஒரு அந்நிய தேசத்தவன் சொன்னதை ...திமிரோடு .....தானும் உடன்பட்டு சொன்னது....இந்த நேரத்தில் நினைவிற்கு வந்தது !

If the rape is inevitable one,just lie back and enjoy !

ஓரிருவர் முடித்த பிறகு..... கடைசியாக ஓட்டுனன் வந்தான்.....தன் பருத்த குறியை இவனுள்ளே அழுந்த செலுத்தி இயங்க ஆரம்பித்த நொடி....வலியும் வேதனையும் ஊடே.....தன்னை பெண்மையாக உணர ஆரம்பித்தான் வாதாபி !

அங்கேயோ ...பிங்களன் பெண்கள் தின கட்டுரைக்காக பத்தி பத்தியாக எழுதியிருந்ததை எல்லாம் DEL செய்து விட்டு .... ஒரே வாக்கியம் மட்டும் எழுதி .... பேஸ்புக்கில் பதிவிட்டான் .

If the Shit - eating is an inevitable one , smell it and chew joyfully !

happy women's day .