Wednesday 13 March 2013

திரைப்பட இயக்குனர் பாலா


நேற்றைய இணைய பரபரப்பாக பரதேசி படத்தின் 'ஷூட்டிங் ஸ்பாட்டில்' நடந்ததை வெளியிட்டிருந்தார்கள் . அதில் படத்தின் இயக்குனர் பாலா அவர்கள் , நடிப்பவர்களை கடுமையாக அடிக்கும் , உதைக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன ! இது ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.சில மாதங்களாகவே...அரசியல் அல்லது சினிமா என்று மாற்றி ..மாற்றி நமக்கு 'சர்ச்சை ஷோ ' காட்டிக் கொண்டு உள்ளார்கள்.இந்த மீடியாக்களும் நம்மை ரொம்ப செல்லம் கொடுத்து , கெடுத்து வைச்சிருக்கு ! நமக்கும் பொழுதுபோக்குக்கு குறைவில்லாமல் போய்க் கொண்டு தான் இருக்கிறது ! சினிமா சர்ச்சையில் இது இயக்குனர்கள் காலம் போல...சர்ச்சையில் சிக்க ! கமல் அவர்களைத் தொடர்ந்து மணிரத்னம் , பிறகு அமீர் ... இப்போது பாலா !

அது எப்படி படம் வெளியிடும் சில தினங்களுக்கு முன்பு மட்டும் , கரெக்டா சர்ச்சை கிளம்புகிறது என்று யோசித்துப் பார்த்தால் .... ஏதேனும் ஆரம்பம் ஒன்று இருக்கும் ...... இப்போது பரதேசியின் 'ஷூட்டிங் ஸ்பாட் கிளிப்பிங் ' போல ! உண்மையில் . இந்த மாதிரியான ஆரம்ப 'மேட்டர்கள்' எல்லாம் ஒரு 'வெளம்பர மேட்டர்களுக்காகத்' தான் வெளியிடப்படுகின்றன ! ஆனால் நடப்பது என்னவென்றால் வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கும் கதையாக ....புதியதோர் பிரச்சனைக்கும் காரணமாக ஆகி விடுகிறது ! விஸ்வரூபத்திற்கும் ,இதே கதை தான் ஆயிற்று, சற்று பரபரப்பு வரட்டும் என்று கமல் 'அசால்ட்டாக ' விட்டது கடைசியில் அவரே 'சாமர்சால்ட் ' அடிக்கும்படி ஆயிற்று ! எனினும் முடிவு சுபமே....இது எல்லோருக்கும் சாத்தியமில்லை ! புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக நம்ம அமீர் 'சாமர்சால்ட்' அடித்து பார்த்து ,உடைந்து போனது தான் மிச்சம் ! பருத்தி வீரன் எடுத்தவரா இவர் ...'அசிஸ்டென்டுக்கள்' மாறி விட்டனரா.??

ஆக ... பாலாவே , ஒரு பரபரப்பு கிளம்பட்டும் என்று வெளியிட்டிருக்கும் இந்த காணொளி ,கடைசியில் மனித உரிமை மீறல் என்றெல்லாம் சர்ச்சை கிளம்பி இருப்பதை நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் அவர் ! தன்னையும் தனது படங்களையும் அதிக tough ஆக காட்டிக் கொள்வதில் அவருக்கு அலாதி பிரியம் ! ஆனால் இது தான் சாக்கு என்று , அவரது 'நலன் நினையார்' இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டு விட்டார்கள் !
பாலா அடிப்பது ஒரு 'செட்டிங்' செய்யப்பட கழி , சர்க்கஸில் நம்ம பபூன்கள் வைத்திருப்பது போல ! சத்தம் அதிகமாக இருக்குமேயன்றி அடி பலமாயிராது ! தேயிலை தோட்ட கொத்தடிமைகளை ,கங்காணி (Supervisor மாதிரி ) மிக கொடூரமாகத் தான் அடிப்பார்கள் என்று நிறைய படித்திருக்கிறேன் ! அது போன்ற ஒரு காட்சியைத் தான் பாலா , கங்காணியாக அடித்து ...உதைப்பது போல் நடித்துக் காட்டுகிறார், மற்றப்படி சரியாக நடிக்காததால் அடிப்பதல்ல அது ! ஒவ்வொரு கதாப்பாத்திரமும் எப்படி செய்ய வேண்டும் என்று , அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு செய்துக் காட்டுகிறார் ! கங்காணி அடிக்கும் போது எப்படி வலியில் புரண்டு ... உருள வேண்டும் என்று தான் அதர்வாவும் செய்கிறார் , அவ்வளவு தான் ! தொடர்ச்சி இல்லாமல் ....ஓரிரு வினாடிகள் மட்டும் ஒவ்வொரு காட்சிகளும் எடிட் செய்து வேகமாக செல்வதால் , வேறு மாதிரி தெரிகிறது ! பொறுமையாக எல்லாக் காட்சிகளையும் ... திரும்ப ...திரும்ப...கூர்ந்து பார்த்தால் புரியும் !

நடிகர் சூர்யாவின் திருப்புமுனை படமான "நந்தா"வில் அவரின் ஆக்ரோஷமான நடிப்பைப் பார்த்து பாராட்டியவர்களிடம் சூர்யா சொன்னது என்னவென்றால் ," பாலா செய்தததில் கொஞ்சம் தான் நான் செய்ததது, ஒரு Animal மாதிரியான அவரோட Body Language பார்த்து எனக்கே பயமாக இருந்தது ", என்றார் ! இங்கு நாம் நந்தாவில் சூர்யாவின் மிரட்டும் நடிப்பை ... முக்கியமாக கல்லூரியில் அவர் போடும் அந்த முதல் Fight ! அப்ப பார்த்துக்குங்க பாலாவின் பயிற்சி எப்படின்னு !

என்ன இருந்தாலும் ....நம் சமுதாயத்தில் வாழும்....வாழ்ந்த கடை நிலை மக்களின் வாழ்கையை திரைப் படமாக எடுக்கும் இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்கிற மரியாதை இன்றளவும் உண்டு ! ..

ஒரு காலத்தில் தான் ,புதியவர்களை இயக்குனர் 'பின்னி' எடுப்பார்கள் என்று சொல்வார்கள் ! நம்ம பாரதிராஜா சார் செமையா அறைவார் என்று சொல்வார்கள் ... பாலசந்தர் சார் கூட கடுமையாகத் 'திட்டவும்' செய்வார் எனவும் கேள்வி ! ஒரு 'வெற்றி..' கரமான படத்தில் கூட பிரபல கதாநாயகரும் ,இயக்குனரும் ...நீயா...நானா .. என்று முகத்தில் குத்திக் கொண்டதாக செய்தி உண்டு ! நடிகைகளுக்கு வேறு மாதிரி அடிகள் விழும் என்று கிசு கிசுவும் உண்டு !
ஆதலால் சினிமாவில் இதெல்லாம் ஜகஜமப்பா !!

எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்...ஒரு படம் ஹிட் ஆகி விட்டாலே...பந்தா காட்டி , சம்பளம் ஏற்றி வாழும் நடிகர்கள் இப்போது ! அப்படி எல்லாம் சாதரணமாக,அடிக்கவோ ஏன் திட்டக் கூட முடியாது ! சில வருடங்களுக்கு முன்பு கூட விரல் வித்தை நடிகர், 'டாட்டா சுமோ' இயக்குனரை...படப்பிடிப்பின் போது ,இயக்குனர் மற்றவர்களிடம் பேசும் போதெல்லாம் ...அவர் பின்னால் நின்றுக் கொண்டு அவரை மாதிரியே செய்துக் காட்டி ' டீஸ்' பண்ணிக் கொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் இயக்குனர் சட்டென்று திரும்பி விட....கடுப்பாகி விரல் நடிகரை எச்சரித்த பிறகு தான் அடங்கினார் ! இது தான் இன்றைய நிலைமை !

பாலாவை விமர்சிப்பது போல் ஆரம்பித்து கடைசியில் வக்காலத்து வாங்குவது போல் இருக்குதே என்று நினைப்பவர்க்கு.....
எனது சகோதரர் ஒருவர் வடபழனி விஜயா மருத்துவமனையில் பணி புரிந்த போது அவருடன் பணியாற்றிய மருத்துவ நண்பர் விடுமுறை நேரங்களில் அவரது உறவினரான பாலாவின் ரூமுக்கு என் சகோதரருடன் செல்வார்.உதவி இயக்குனராக பாலா இருந்த சமயம் அது....என் சகோதரிடமும் நன்கு அறிமுகமாகி ...அவரை சிறப்பாக சரக்கு+விருந்தோம்பல் செய்து கவனித்திருக்கிறார் ! இந்த விஷயம் எனக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து , நான் அடித்து பிடித்து அசோக் நகர் அருகே இருந்த அவர் அலுவலகத்துக்கு சென்ற போது அவர் இயக்குனராக உயர்ந்து உச்சத்தில் இருந்தார் ! அவரது உறவினர் மற்றும் எனது சகோதரர் பெயர் சொல்லி பேசலாம் என்று பார்த்தால் ....அவரை சந்திக்கவே முடியவில்லை ! என் சகோவும் ,பாலா உறவினரும் கூட சென்னையில் இருந்து தத்தம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தனர் ! ஒரு நாள் ராத்திரி ,பயங்கர கடுப்பாகி ...வடபழனி அய்யனார் ஒயின்ஸ்சில் சரக்கடித்து விட்டு நண்பர்களுடன் பாலா ஆபீஸ் வாசலில்..."யோவ் பாலா .... நீ என்ன பெரிய .....லா ?" ...( அதாங்க பீலா...பீலா ! !) அப்படின்னு நண்பர்களோட சத்தம் போட்டு விட்டு வந்தேன் .... பூட்டியிருந்த   ஆபீஸைப் பார்த்து !

Paradesi movie's Teaser link : http://www.youtube.com/watch?v=5nWd2tpGgKM

Monday 11 March 2013

காதல் ..... கள்ளக் காதல்

ஒரு Romantic பதிவு !

' இருவர் ' படத்தில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் யாரை குறிப்பிடுகிறது என்கிற அரசியலுக்கு போகாமல், காதலை மட்டும் பார்க்கலாம் !

பிரகாஷ்ராஜ் ஒரு திருமணமான அரசியல்வாதி , இலக்கியத்திலும் ஈடுபட்டு புதினங்கள் படைப்பவர் ! இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளம்பெண்ணான 'தபு ' பிரகாஷின் படைப்புகளால் மனம் கவரப்படுகிறாள் ! ஒரு ரயில் மறியல் போராட்டத்தின் போது ..... எதற்கும் அஞ்சாமல் ரயிலின் முன் படுத்திருக்கும் அவரின் நெஞ்சுறுதியை பார்த்து மையலும் கொள்கிறாள் ! அண்ணலும் ...அவளும்.... நோக்கினார்கள் ....காதல் வயப்பட்டார்கள் ! பிறகு கடிதம் மூலம் தொடர்கிறது !

ஒரு நாள், தபு அவருடனேயே நிரந்தரமாக வசித்திட கிளம்பி வந்து விடுகிறாள் ! பிரகாஷ்ராஜின் சகாக்கள் தபுவை ஒரு வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள் ...அங்கு காத்திருக்கிறார்.... பிரகாஷ்ராஜ் ஆவலுடன் வருகிறார்....தேடுகிறார்....கையில் புத்தகத்துடன் ஒரு படியில் அமர்ந்தவாறு , தபு அவரை நிதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் ! பார்வையிலேயே நிறைய பேசுவார் ....எனக்கு புரிந்தது .."பாவி...இப்படி மனசுக்குள் புகுந்து வேதனை படுத்துகிறாயே ".... உன்னை நம்பி வந்துட்டேனே ... என்ன ஆகுமோ ", என்றெல்லாம் விழிகளால் பேசுவார் !

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ....ஒரே முறை சந்தித்தது தான்....பேசியது கிடையாது ....வெறும் கடித தொடர்பு மட்டும் தான் ! மனதில் குடியேறியவரின் வீட்டிற்கு .... வாழ்நாள் குடிவாசியாக .... ஊர்,சுற்றத்தார் அனைவரையும் விட்டு விட்டு ஒரு நம்பிக்கையில் வந்து விட்டார் ! நம் ஊர் நியாயப்படி இந்த விஷயம் "கள்ளக்காதல்."..."அவளை தொடுப்பா வச்சிருக்கான் ",என்கிற மாதிரியான விஷயம் ! மணி சார் இந்த விஷயத்தை கவித்துவமாக கொண்டு போயிருப்பார்....இம்மி பிசகினாலும் கதாபாத்திரங்களின் மதிப்பு போய் விடும்! ஆனால் மணி கலக்கி இருப்பார்....தபுவின் நடிப்பும் நன்றாக இருக்கும்.

பிரகாஷ்ராஜ் தயங்கி ....பின்னர் நிதானமாக நெருங்கி "செந்தாமரை ", என்று அடித்தொண்டையில் ...மிக்க காதலுடன் அழைப்பார் ! அதற்கு அவள் கொடுக்கும் ஏக்கப் பார்வை பதிலில் புரிந்துக் கொண்டு இன்னும் நெருங்கி அருகே வருவார் ! (காதலின் போது .....காதலுடன்,'ஹஸ்க்கி வாய்ஸில்' காதலன் அல்லது காதலி பெயரை சொல்வது ஒரு முக்கிய கடமைன்னு நினைக்கிறேன் . நான் கூட அப்படி try பண்ணேன்...நல்ல பலன் கிடைத்தது ...நீங்களும் பண்ணிப் பாருங்க ...முடிஞ்சா , இப்பவே உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க பெயரை சொல்லிப் பாருங்க....கிக்கா இருக்கு இல்லே !)

பிறகு பிரகாஷ்ராஜ் ,தபுவை பற்றி ....அவரை தேடிய கதை பற்றி .... சொல்லிக் கொண்டே ...காலோடு கால் உரசி அமர்வார் ! (இதுவும் ரொம்ப முக்கியம் ... டக்கென்று உட்கார்ந்தால் விலகி விடுவர்...பேசிக்கொண்டே உட்காரும் போது தேவதைகள் விலகுவதில்லை ) இனிமே தான் படமே...வசனங்களை பாருங்கள் !

பிரகாஷ்ராஜ் ,"பைத்தியம் எனக்கு மட்டும் தானான்னு தெரியனும் ....மெட்ராசுக்கு வந்துடுன்னு நான் கடிதம் எழுதனதும் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வந்துட்டே ...ஏன் ? ".

தபு," உங்க நாலு வரி கவிதையினாலே ".,.., "வர சொல்லி கடிதம் போட்டீங்க ..வந்துட்டேன்... அம்மாவையும்,அப்பாவையும் எதிர்த்து ....படி தாண்டி வந்துட்டேன் .....ஆனா, நான் இங்கே யாரு ?".

ஏற்கனவே திருமணமான ஒருவன் என்ன பதில் சொல்ல முடியும் ?.... பிரகாஷும் சற்று அதிர்ந்து ...பின் சமாளித்து , மொழியால் விளையாடுவார் !

"என் காதலி ....என் கண்மணி ....என் ஸ்நேகிதி !", என்பார் ... ரொம்ப சாதுர்யமாக !

மெல்ல அதிர்வார் தபு ...."அட பாவி ...ஜாலக்காரா...மனைவி என்கிற சொல்லை தவிர எல்லா சொல்லையும் சொல்கிறாயே .... இனி எங்கு செல்வேன்....இந்த ஜென்மத்தில் இது தானோ என் வாழ்க்கை ",என்று கண்களாலேயே பேசி .... சுய பரிதாபம் மேலிட....தன் நிலை எண்ணி ,கண்ணீரை அடக்க முயன்று, முடியாமல் ... சாளரத்தில் சாய்ந்து அழுவார் ! எல்லாம் ஒரு சில வினாடிகள் தான்...பிறகு துக்கத்தை காதல் சாப்பிட்டு விடும் !

சற்றே அழுகையை முழுங்கி விட்டு .... தலை சாய்த்து , சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு.... ஒரு காதல் பார்வை பார்ப்பார் பாருங்கள் .... CLASS !!! பார்வை சொல்லும், " டேய் திருடா...உன் தமிழால் என்னை சிறை பிடித்து விட்டாயே !".

அப்புறம் அடுத்தது நேரா மேட்டர் தான் ! ஆனா ..இந்த தடவை கவிதையை 'அதுக்கு' பிறகு தான் சொல்வார் பிரகாஷ்ராஜ் !

"உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் , மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே !"

"தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலத்தால் , எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலக்குதடி !"
.
.
.
"இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் புதைத்த மோகத்தில் சில நிமிடம் "
.
.
"ஆடை கலைந்தேன் ....வெட்கத்தை நீ அணைத்தாய் ! "
.
.
என்றெல்லாம் ...அற்புதமாய் வைரமுத்து வரிகள் சென்றுக் கொண்டிருக்கும் ! காந்தர்வ காதல் திருமணம் !!

எதுக்கு இவ்வளவு நீ....ளமாய் கதைச்சேன்னா ,ஒரு கருத்து சொல்லத் தான் ! கல்யாணத்துல காதல் செத்துப் போய்விடுவதாக உணருகிறேன் ! அதை துக்கமாகவோ....வேறொரு மாற்றமாகவோ எண்ணிக் கொள்வது அவரவர் .......

'தல' பாரதி கூட அதை வைத்துத் தான் சொன்னாரோ.... " காதல்....காதல்....காதல் ! காதல் போயின் , சாதல் ...சாதல் ....சாதல் !!

திருமணத்தில் முடிவதல்ல காதல் .... ஏனென்றால் திருமணம் முடிந்த பிறகு ,இல்லற வாழ்க்கைக்குச் செல்லும்போது அங்கு கதாபாத்திரம் மாறுகிறது !
காதலன் - காதலி என்பது போய் ...கணவன் - மனைவி வந்துடும் டும்...டும்...டும் ! அங்கே எண்ணம், செயல்,பேச்சு அனைத்தும் வேறொரு பரிமாணத்திற்கு சென்று விடுகிறது.அதிலொன்றும் தவறில்லை .... ஆனால் அங்கு காதலின் சுவாரஸ்யங்கள் , சின்ன சின்ன சந்தோஷங்கள் , சகிப்புத்தன்மை போன்ற பல விஷயங்கள் காணாமற் போய் விடுகின்றன ! காதலின் போது பெரிதாகத் தெரியாத விஷயங்கள் பிறகு பூதாகரமாகத் தெரியும் ! பெரிதாகத் தெரிந்த விஷயங்கள் பின்னர் சில்லரைத்தனமாகத் தெரிய ஆரம்பிக்கும் !

உதாரணங்கள் வேண்டுமா...

கல்யாணத்திற்கு முன்பு ie ., க.மு.:-"ஒரு காபி கூட போடத் தெரியாம என் இளவரசி வளர்ந்திருக்கா ! "

க.பி :- "ஏண்டி , குழம்பாடீ வச்சுருக்கே ? உப்பு தான் சீப்பாக் கிடைக்குதுன்னு கொட்டிட்டியா ?"

Equal Rights ...So , இன்னொரு க.மு:- "உன் அம்மாவை நான் மாமியாரா நினைக்காம ,என் அம்மாவா தாண்டா நினைப்பேன் !

க.பி :- "ஏன் ..உங்கம்மாவுக்கு நீங்க மட்டும் தான் புள்ளையா ... உங்க அண்ணன் - அண்ணி வீட்ல வச்சுக்க மாட்டாங்களா?"
ஆக, ஆச்சரிய ' குறியா' (letters) முன்னாடி இருந்தது ...பின்னாடி கேள்விக்குறியா மாறுது !

விஷயம் என்னன்னா ... கல்யாணத்துக்கு முன்னாடி, காதல் தனி..... வாழ்க்கை தனி , கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டும் ஒன்னாகுது ...அங்க தான் பிரச்சினையே ! Mis-understood with the fusion ! காதலும் வாழ்க்கையும் ஒன்றாக இருப்பதை புரிந்துக் கொள்ளவும் முடியாமல் ... பிரித்துப் பார்த்தாலும் குழப்பமும் ....சண்டையும் தான் !

"அதெல்லாம் இல்லை ,நாங்கள் அப்ப இருந்த மாதிரியே தான் இப்பவும் இருக்கிறோம்னு", சொல்றவங்க வாய்க்கு போஜனம் கிடைக்காது !

இதுல 'தாவான்னு' ஒன்னு இருக்கு ...ஏதோ பாத்திரமுன்னு நினைக்காதீங்க , 'தாலி கட்டா வாழ்க்கை' ! அதில் இந்த "அடி ..புடி " பிரச்சனை எல்லாம் இல்லை ! யாரும் யாரையும் விரட்ட முடியாது ....அப்படியே Maintain பண்ணலாம் !

"ரஜினி ரசிகையா நீ ? , ஒரு தடவை போட்ட உப்பு ...நூறு தடவை போட்ட மாதிரி இருக்குன்னு", ஜோக்கடிக்கலாம் ஜாலியா !

திருமணத்தின் போது ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையில்லை...ஆனால் ஏற்றுக்கொண்டு ,கடமைக்கு வாழ்வதற்கும் .... ரசனையோடு அனுபவித்து வாழ்வதற்கும் வித்தியாசமிருக்குமன்றோ....

நான் சொல்ல வரும் விஷயம் புரிந்துக் கொள்ள முடிகிறதா....

என்னுடைய சிறு வயது முதல் ஒரு பெண்மணியை கவனித்து வந்திருக்கிறேன் ...சாயங்காலம் 7 மணி அளவில் எங்கள் வீட்டை கடந்து செல்வார்...கையில் தூக்கு கூடையோடு . மாநிறமாய் இருந்தாலும்,மிக களையாக ... அகல குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு .... நறுவிசாக உடுத்திக் கொண்டு செல்வார்.அவர் தினமும் செல்லும் இடம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு என்று பிற்பாடு தெரிந்தது.நானும் ஒரு முறை ஊருக்கு செல்ல பெற்றோருடன் காத்திருந்த போது ,பேருந்து நிலைய அலுவலக அதிகாரி ஒருவருக்கு உணவு பரிமாறிக் கொண்டு ,சிரித்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.அவர் எங்கள் தெருவைக் கடந்தால் மணி சரியாக 7 என்று அர்த்தம் .... தெருவுக்கே அவர் நடமாடும் மணி காட்டியாக விளங்கினார்.புயல் ,மழை என்று எந்த நாளாக இருந்தாலும் அவர் வருவது நிற்காது....தீபாவளி போன்ற விடுமுறை தினங்கள் தவிர.! ஆனால் விடுமுறைக்கும் மறுநாள் , சற்று பெரிய தூக்கில் உணவு செல்லும்.நான் அசந்து போய் விடுவேன், பள்ளி வாழ்க்கை முதல் என் கல்லூரி இறுதி வரை , ஏன் அதற்கு பிறகு என் வேலை முடிந்த விடுமுறை தினங்களில் கூட பார்ப்பேன், தொடர்ந்து பல வருடங்கள் ! மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...மோட்டார் தொழிலில் இரவு வேலையில் இருக்கும் தன் கணவருக்கு ,சூடாக உணவைக் கொடுப்பதற்கு ,ஒரு நாள் கூட தவறாமல் இவ்வளவு கடமை உணர்வுடன்...இல்லை...காதல் உணர்வு இருக்க வேண்டும்,என்றெல்லாம் நினைத்து பெருமைப்படுவேன் அந்த பெண்மணியை பற்றி !
ஒரு நாள் அவருக்கு உடல் முடியவில்லை போல ,சைக்கிளில் ஒரு அண்ணன் அவரை அழைத்துப் போய்க் கொண்டிருந்தார் ,பெண்மணி சோர்வுடன் கேரியரில் உட்கார்ந்திருந்தார் ! சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்றவர் அவர் மகன், அந்த சூழ்நிலையில் கூட இவர் தன் கையால் உணவு பரிமாற போய்க் கொண்டிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !

எங்கள் கடைக்கே அந்த அண்ணன் வேலைக்கு சேர்ந்தார் , அவரைப் பார்க்க அவரின் ஊரை சேர்ந்த சில சில பையன்கள் வருவர்...அவர்கள் சொன்ன ஒரு விஷயம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது ! அந்த அதிகாரி அவரின் கணவரே அல்ல....அவரது கணவர் ஊரிலேயே விவசாயம் செய்பவர் அதாவது அந்த அண்ணணின் அப்பா !?.பருவ வயதில் இருவரும் காதலித்து உள்ளனர்...ஆனால் வீட்டின் எதிர்ப்பினால் திருமணம் வேறொருவரோடு முடிந்து விட்டது ! இருப்பினும் அந்த பெண்மணி...தன கணவருக்கு அனைத்து விபரங்களையும் கூறி இருக்கிறார் ! அவர் கணவரும் அதை 'புரிந்துக்' கொண்டு , சந்திக்க...உணவு எடுத்து செல்ல அனுமதித்திருக்கிறார் ! ஆனால் இவர்களின் சந்திப்பு அந்த அதிகாரியின் மனைவிக்கு தெரிந்து , அதிகாரியின் மொத்த குடும்பத்தினரும் அவரை எதிர்த்து ,ஒதுக்கி விட்டனர் ! வீட்டு உணவு என்றால் அந்த பெண்மணி கொண்டு வருவது தான் , உறவினர்கள் என்றால் ..அந்த அண்ணனும் , பெண்மணியின் கணவரும் தான் அவருக்கு ! ஏனையோர் அவரின் நண்பர்கள் மட்டுமே .... சில வருடங்களுக்கு முன்பு அந்த அதிகாரி நோயில் படுத்திருந்து ... இறந்ததற்கும் முதல் நாள் வரை அந்த பெண்மணி மருத்துவமனைக்கு உணவை எடுத்து வந்து ஊட்டி விட்டு தான் செல்வார் !

காதலில் என்ன கள்ளக்காதல் .... நல்ல காதல் .... காதல் அவ்வளவு தான் !!

இருவர் படத்தின் அந்த காட்சியின் தொடர்ப்பு : http://www.youtube.com/watch?v=6ZH2x42v-xY

Thursday 7 March 2013

அவ்வா

மகளிர் தினத்திற்காக ..,


நான் பார்த்து ...ரசித்து... பழகிய, ஒரு அழகியப் பெண்ணை பற்றியதொரு மீள் பதிவு !


ரங்கவ்வாவை பார்க்க நல்ல நிறத்துடனும்.. அஜானுபாகுவான தோற்றத்துடனும் இருப்பார்கள் ...முழுப் பெயர் ரங்கநாயகி பாட்டி ! ...நாங்கெல்லாம் 'ஆய் அவ்வா' என்றும் கூப்பிடுவதுண்டு.ஏன் அப்படி கூப்பிடுகிறோம் என்பது இனி வரும் பத்தியில் புரிந்துக் கொள்வீர்கள்! முகம் வந்து மகாலட்சுமிக் கணக்கா இருக்கும் அவ்வா. . . வாயத் தொறந்தா மட்டும் சும்மா தூய தமிழ் வார்த்தைகளாகத் தான் கொட்டும். ஊரிலிருந்து நான் வந்து ,அவரை பார்க்க சென்றவுடனேயே என்னை வரவேற்பதே.."வாடா ஒக்கால ஒழி .. ங்கொப்பன் ... ங்கோத்தா..எப்படி இருக்காங்க !" என்று தான்...வரவேற்பு இருக்கும் ..! முதலில் அதிர்ந்து...பின்...பழகி..பழகி...எனக்கு மட்டும் இல்லை.,ஊர் .. உலகத்துக்கே பழகிடுச்சு..! கெட்ட வார்த்தை என்றவுடன் ஏதோ கடமைக்கு என்று நாலு வார்த்தை மட்டும் இல்லை....அவ்வாவிடம் .. அதற்கென்று ஒரு தனி அகராதியே உண்டு..! நித்தம் ஒரு புதிய வார்த்தை என்பது போல் புது ..புது ..கெட்ட வார்த்தைகள் வந்து விழும் ! சும்மா வார்த்தை . . . என்றில்லாமல் அதில் அதீத கற்பனா சக்தி ...ரசனையுடன் கலந்திருக்கும்.! (ஒம் பு....டையில என் ஒழவு மாடு ஒழு...க) இது போன்ற வண்டை..வண்டயான வார்த்தைகள் ..அற்புதமாக வந்து விழும். கோபமா ..இருந்தாலும் சரி...குணமா இருந்தாலும் சரி...அவ்வாவுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் 'இனிசியல்' மாதிரி ஒரு 'வண்டை' வார்த்தை இருக்கும். இப்படி எல்லாம் பேசறதாலே அவங்களை நீங்க யாரும் 'சொர்ணா அக்கா' ரேஞ்சுக்கு வில்லியா பாக்காதீங்க ..!.., அவ்வளவு அன்பும் அவங்ககிட்டே கொட்டிக் கிடக்கும் ..! சுத்தி இருக்குறவங்க யாருக்கு என்ன கஷ்டம்னாலும் ...அதே வண்ட ..வண்ட..வசவுகளோட...உதவிக்கிட்டுத் தான் இருப்பாங்க ! ( புள்ள குடிக்கலைன்னாலும்...அந்த பயல வுட்டு உறிய சொல்லலாம் தானே...இப்ப பாரு பால் கட்டிகிச்சு..!) என்றெல்லாம் திட்டியபடி தேவையான வைத்திய முறை அல்லது பணம் கொடுத்து டவுன் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார்கள். இது போல் ஏக ..அநேக உதவிகள்..! இதனால் பாட்டி ஒரு பேரிளம் அரசக் குமாரி போல் எங்கள் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.


என்னதான் அரசக்குமாரி மரியாதை என்றிருந்தாலும், அரசரான தாத்தாவிடம் அவர் மிக அடக்கத்துடன் நடந்துக் கொள்வார் என்று நாம் நினைத்து விடக் கூடாது...தாத்தாவுக்கே செம 'கவுண்ட்டர்' கொடுப்பார்! தாத்தாவும் பவுசு இறங்கி விடாமல் ,அவரும் எதிர்த்து பதிலடியாக வார்த்தையும் ..சில சமயம் அடியும் கொடுத்து விடுவார். அவ்வாவைப் பார்க்கும் போது, தாத்தா கட்டுமஸ்த்தாக இருந்தாலும் சற்று குள்ளமாகவே இருப்பார்...கொஞ்சம் இளையவர் மாதிரி ..! ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு ...இருவருக்கும் நடக்கும் போர் ..இருக்கிறதே ..அது மிக ரசித்து ஊராரால் பார்க்கப்படும்! இருவரும் மாற்றி..மாற்றி..திட்டிக் கொள்ள ..( போடா பொண்டாட்டி சா...ட நக்குனவனே..!....போடி தே..மவளே..!) தாத்தாவுக்கு அதிக கெட்ட வார்த்தைகள் தெரியாததால் அந்த ஒரே வார்த்தையையே வெவ்வேறு modulation ல் ,அதை நீட்டி முழக்கி சொல்லிக் கொண்டிருப்பார்! இதையும் ஏதோ திருவிழா கதாகலாட்சேபம் போல் ஊரே நின்று ரசித்தபடி வேடிக்கைப் பார்க்கும். அது ஒரு மிகப் பெரிய entertainment ஆக மக்களுக்கு இருந்தது ! ஊர் மக்களே சில சமயம் இருவரையும் 'கிண்டி' விட்டு வேடிக்கை பார்ப்பதும் உண்டு..! எனக்கு என்னமோ, அந்த சண்டையும் ..கெட்ட வார்த்தை பரிமாற்றங்களும் .., கூடலுக்கும் முன்னால் ஒரு warm up என்றுத் தோன்றும்..! அது தாத்தா பாட்டிக்கு மட்டும் என்றில்லாமல் வேடிக்கைப் பார்க்கும் ஊருக்கும் ஒரு warm up என்றே தோன்றும். (ஊரில் தியேட்டர் ..டிவி என்றெல்லாம் கிடையாது ...தாத்தா மட்டும் கொக்கோக சாஸ்திரம் என்ற பழைய புத்தகத்தை ...படம் பார்த்துக் கொண்டிருப்பார்!) ஏனெனில் சண்டை நடந்துக் கொண்டிருக்கும் போதே தாத்தா கோபத்துடன் சரக்கடிக்க போய் விடுவார்...அங்கு போய் நல்லா ஏத்திகிட்டு.., கடையிலோ அல்லது வழியிலோ மல்லாந்து கிடப்பார் ..! ஆனா இப்படி 'சண்ட' போட்ட பாட்டி, ஒண்டி ஆளா தேடிப் போய் தாத்தாவை அலேக்காக தூக்கி ....தோளில் போட்டுக் கொண்டு வந்துக் கொண்டே இருப்பார்..! அவ்வளவு அன்பு..! இதில் என்ன sex warm up என்போர்க்கு.....பாட்டியின் மூத்த புத்திரியான என் பெரியம்மாவும் ..பாட்டியும் ..சில மாத இடைவெளியில் ...குழந்தைப் பெற்றார்கள்..! என் கடைசி சித்தி என்னை விட இளையவர்..! ஆனால் என் பாட்டி இதைப் பற்றி கிஞ்சித்தும் கவலையின்றி வலம் வருவார்..! (எம்பு ...யில நான் முட்ட போட்டேன்..உங்க கொட்ட பருப்புக்கு என்ன வந்தது..?)


தாத்தா இறந்தப் பிறகு சிறிது காலம் அவர் வருத்தத்தில் அமைதியாக இருந்தார்..பின் விரைவிலேயே பழைய கலகலப்பு திரும்பி..மறுபடியும் ..கெட்ட வார்த்தை புராணம் தான்...சற்று முதிர்ச்சியோடு..! அது போல் இப்போது அவரும் சரக்கடிக்க ஆரம்பிச்சிட்டார் ...1 /2 தான் கேட்பார்...கொடுத்ததும் ..அது என்ன பிராண்ட் ..ரம்மா..விஸ்கியா...என்றெல்லாம் பார்க்காமல் ஆசையுடன் வாங்கிப் பிரித்து, எதுவும் கலக்காமல் முதலில் ஒரு மிடறு ஊற்றிக் கொண்டு மிட்டாய் போல்..சப்பி..சப்பி .. முழுங்குவார்.


எந்த கல்யாணக் காட்சி முடிஞ்சாலும் ..அன்னிக்கு இரவு முதல் ராத்திரிக்கு பொண்ணு ...மாப்பிள்ளையைப் போய் ‘பாக்குறத்துக்கு’ முன்னாடி அவ்வாவைப் பாக்கச் சொல்லுவாங்க ...அவ்வாக்கிட்டே பேசுன கொஞ்ச நேரத்திலேயே பொண்ணு முகம் சிவந்து ..ஒரு வேகத்தோடு முதலிரவு ரூமுக்குள்ள நுழைஞ்சுடும்..! என்னா வகுப்பு எடுப்பாங்களோ..?


ஒரு மாதத்திற்கு முன்பு அவ்வாவுக்கு உடல்நிலை மிகவும் சரியில்லாததால் என் பெற்றோர் பார்ப்பதற்கு சென்றிருந்தனர் ...என்னிடம் பேச வேண்டும் என்றதால் ..என் அம்மாவிடமிருந்து செல்லில் அழைப்பு வந்தது .நான்.." அவ்வா..எப்படி இருக்கீங்க...எல்லாம் சரியாயிடும்..கவலைப்படாதீங்க..!". அதற்கு அவ்வா, " டேய் ஒன்னும் சரியில்லடா...அந்த 'பொண்டாட்ட..ஒழு ....வன்' (தாத்தா) பக்கத்திலயே நிக்கிறான்...எமப்பய வேற ,பூ...முறுக்கி தோள்ள போட்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கான்டா..நான் தேற மாட்டேன்னாங்க." நான் ஆறுதல் சொல்லி விட்டு ,பின் எப்போதும் போல் என் அலுவல்களை ? பார்க்க ஆரம்பித்து விட்டேன்.பின்னர் 4 நாட்கள் கழித்து அவ்வா இறந்து விட்டதாக தகவல் வந்தது..!

ஆன்மீக படலம் - 1

'எ நாவல் டைம்' என்கிற மாத நாவல் புத்தகத்தில் பாலகுமாரன் அவர்கள் எழுத ஆரம்பித்ததும் தான் என் ஆன்மீக வாழ்க்கை சற்று வேகமெடுக்கத் தொடங்கியது ! பள்ளி பருவத்தில் கையில் ...அவ்வளவாக பணம் இருக்காததால் ...அவரது நாவல்கள் ஏதேனும் நூலகத்திலோ....தொடர்கதைகளிலோ தான் படிக்க முடியும் ! ஆனால் பாக்கெட் நாவல் அசோகன் அவர்கள் ஒரு புரட்சியாக ...ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக ....'நாவல் டைம்' போட ஆரம்பித்ததும் ...மிக மகிழ்ச்சி அடைந்த மக்களில் நானும் ஒருவன் ! ஆனால் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை விலக்கியதில் சற்று வருத்தமும் கூட ! சமூக படைப்புகளாக எழுத ஆரம்பித்த பாலகுமாரன் அவர்கள் ....சிறிது சிறிதாக ஆன்மீகத்தில் நுழைய ஆரம்பித்த நேரம் அது....ஆக, குறைந்த விலை...நிறைந்த இன்பமாக ... எனது ஆன்மீக படலம் ...மேலும் மெருகேறத் தொடங்கியது !

பாலகுமாரன் அவர்களின் நாவல்களில் அடிக்கடி ...குருவைப் பற்றி குறிப்பிட்டு அதன் அவசியத்தை வலியுறுத்துவதை ...படிக்கும் போதெல்லாம் ...நாமும் ஒரு குருவை தேடிக் கண்டுக் கொள்ள வேண்டும்...என்றெல்லாம் நினைப்பேன் ! அவரது குரு 'யோகி ராம்சுரத்குமாரை ' பற்றி அடிக்கடி குறிப்பிடுவதால் மிகுந்த ஆர்வம் கொண்டு ....ஒரு நாள் திருவண்ணாமலைக்கு சில நண்பர்களுடன் பயணிக்க ஆரம்பித்தேன் ! ஒரு முகவரி கிடையாது...ஏற்கனவே சென்ற அனுபவமும் இல்லை...ஆன்மீக ஆர்வக் கோளாறு !

பள்ளியில் சிறப்பு பயிற்சி என்று அதிகாலையிலேயே வீட்டிலிருந்து சொற்ப பணத்துடன் கிளம்பி விட்டோம்.பண்ருட்டியில் இறங்கி காலை உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்...பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ...தி.மலைக்கு பேருந்து வந்து விட்டது ...இதை விட்டால் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னதால்...எங்கள் கொள்கைப்படி வீணாக்காமல் ...பாதி சாப்பிட்ட தோசையை கொஞ்சம் சட்னி ..சாம்பாரில் புரட்டி... கையில் சுருட்டிக் கொண்டு அப்படியே ஏறி விட்டோம் !. நாகரீகம் பார்த்தால்...வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது..?..எங்கள் வீட்டில் ஒன்றும் பணம் கொடுத்து அனுப்பவில்லையே....ஏதோ....பழைய இரும்பு,பேப்பர் ..போன்றவைகள் தான் எங்கள்' பயண -ஆதாரங்களாக' விளங்கின ! ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து விட்டு பார்த்தால்...கை கழுவ ....தண்ணியை யாரும் வைத்திருக்கவில்லை .... நாங்கள் எல்லோரும் ...அணிந்த உடை...வீசிய கை ...என்று வலம் வரும் பயணிகள் ! பின் பொறுமையாக ...ஒவ்வொரு விரலாக.....உள்ளங்கையின் ஒரு பகுதி விடாமல் ..நாவினால் நக்கி ...நக்கி....பரிசுத்தமான கையாக்கி விட்டோம் ! வித்தியாசமான ஜந்துக்களை தரிசிப்பது போல பயணிகள் பார்த்தனர்....நடத்துனரும் ...ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே ....கை படாமல் பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை கொடுத்தார் ! பாக்கி சில்லறையை அவர் கொடுத்ததும் தான் .... தூக்கி வாரிப் போட்டது எங்களுக்கு !

பண்ருட்டிக்கு பிறகு...ஏதோ அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேர பயணத்தில் தி .மலைக்கு சேர்ந்து விடலாம் என்று நாங்களாகவே நினைத்துக் கொண்டிருந்தோம் ...ஆனால் மேற்கொண்டு 3 மணி நேரத்திற்கு மேல் பயணம் ! அது கூடப் பரவாயில்லை ...எங்கள் பயணத்திற்கான up & down travel planல் ...up க்கே பெரும்பான்மை சரியாகி விட்டிருந்தது ! சரி தான்.....உணவுத் திருவிழா ...இனி ஊருக்கு திரும்பும் வரை வேண்டாம்....கோவிலில் ஏதேனும் பிரசாதம் கிடைக்காதா என்ன ?, என்று மனதை தேற்றிக் கொண்டோம் ! பஸ்ஸில் சில figure கள் இருந்தாலும் .... இது ஆன்மீக பயணம் என்பதால் 'சைட்' அடிக்கக் கூடாது என்று ஒருவொருக்கொருவர் சொல்லிக் கொண்டு....ஆனால் ரகசியமாக பார்த்துக் கொண்டு ....பயணத்தை தொடர்ந்தோம் !

நாவலில் படித்த மாதிரியே...கோவிலுக்கு அருகிலேயே...தேரடி தெருவைக் கண்டுக் கொண்டோம் ! வாழ்க்கையிலேயே...மறக்க முடியாத நிகழ்வு அது ! நீங்களும் அனுபவித்து இருப்பீர்கள் ! நம்மை பாதித்த ....கதையில் படித்த மாந்தர்களை நிஜத்தில் சந்திக்கும் போது ....ஏற்படும் உள்ளக் கிளர்ச்சிகள் .... ஆஹா ...அதை சொல்ல மாளாது ! அதை..நன்கு அனுபவித்து....அந்த உணர்வு குன்றாமல்.....நிதானமாக அந்த வீட்டை நெருங்கி ...தயங்கி நின்றோம் ! வாசலில் அவ்வளவாக கும்பல் இல்லை....உள்ளே சிறிது கும்பல் இருந்தது .எவ்வளவு கெஞ்சினாலும் ....சிலரை...சாமி உள்ளே விட மாட்டார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்...நமக்கும் அது போல் ஆகி விடுமோ....இவ்வளவு தூரம் வந்து ...தரிசிக்காமல் போய் விடுவோமோ .... என்றெல்லாம் பயந்தேன் !அவர் நம்மை பார்க்கவில்லை என்றால்...நாம் ஆன்மீகத்திற்கு லாயக்கில்லை என்று அர்த்தம்...என்று...சமீபத்திய 'சிவாஜி' டயலாக் மாதிரி ...ஆத்திகப் பாதையா...நாத்திகப் பாதையா ...என்று முடிவு செய்துக் கொள்ளலாம் ..என்றெல்லாம் எண்ணினேன் ! ரொம்ப ஓவராயிருக்கோ..!?

நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருக்கும் போது ...பார்க்க வரும் மக்கள் ..கூடை கூடையாக ..பழங்கள்...மலர்கள்...மாலைகள்....என்று ஏகப்பட்ட விஷயங்களோடு வந்திருந்தார்கள் ! குரு ,தெய்வம்,குழந்தை,நோயுற்றோர் ,பெரியோர் ...இவர்களை பார்க்கும் போது வெறும் கையுடன் செல்லாலாகாது ...ஏதேனும் பரிசுகளோடு அல்லவா செல்ல வேண்டும் என்பது உரைத்தது ! ஆனால் இருப்பதோ சொற்ப பணம் ....யோசித்த போது ...பாலகுமாரன் ஜி ...சுவாமி 'சார்மினார்' சிகெரெட் புகைப்பார் என்று சொல்லி இருந்தார் ...சரி என்று ..ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக் கொண்டேன் ! சிறிது நேரத்தில்எங்கள் குழுவை உள்ளே போகச் சொன்னார்கள் ...ஆனால் நீண்ட நேரமாக ..ஒரு வயதான பெண் கெஞ்சிக் கொண்டிருந்தார் ...உள்ளே விடவில்லை...பாவமாக இருந்தது !

சிறிய வீடு....உள்ளே மங்கிய வெளிச்சம் ...." யோகி ராம் சுரத் குமார்....யோகி ராம் சுரத் குமார்.....ஜெய குரு ராயா "....தொடர்ந்து இனிமையான குரலில் ஒரு பக்தையால் பாடப்பட்டு கொண்டிருக்க ... 'அது ' அமைதியாக புகை பிடித்தபடி ....அமர்ந்திருந்தது ! மெல்ல அருகே சென்று ...அமர்ந்து...சிகரெட் பெட்டியை அருகே வைத்து ...வணங்கினோம் ! "பட் ...பட் " என்று ....வலது கையால் எங்கள் இடது முதுகில் அடி விழுந்தது....மெலிதாகவும் இல்லாமல் .... வலுவாகவும் இல்லாமல்....ஒரு தினுசான அடி ! எங்களுக்கு திராட்ச்சை பழம் கொடுத்து விட்டு ....கிளம்ப சொன்னார் சைகையில் ....சிகரெட் பெட்டியை காட்டினேன் ....சரேலென்று தனது புறங்கையால் எங்களிடமே தள்ளி விட்டார் ! பயந்துக் கொண்டு சிகெரெட் பாக்கெட்டை எடுத்து கொண்டு வெளியேறினோம் !

வெளியே வந்த போது...அந்தக் வயதான பெண்...எங்களை பரிதாபமாகப் பார்த்தார் .....வாசலில் நின்ற பையன் இப்போதும் அவரை விடவில்லை ! ஒரு பெரிய ஆச்சரியம் ..... உள்ளே இருக்கும் யோகி .... இந்தப் பையனை எப்படி தொடர்பு கொள்கிறார் ...எந்த அடிப்படையில் ஆட்களை உள்ளே அனுப்பினார்கள் என்று ...இன்று வரை எனக்குத் தெரியவில்லை ! என்னை அனுமதித்ததன் மூலம் ...எனக்கு ஆன்மீக அங்கீகார அகங்காரம் சற்று ஏற்பட்டு...சற்றே தூக்கிய புருவங்களுடன் நடக்க ஆரம்பித்தோம் !

இன்னும் சில சித்தர்கள் மலையில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு....ரமணாஸ்ரம் வழியாக மலைக்கு செல்லும் பாதை அறிந்து ...மேலே செல்ல ஆரம்பித்தோம் ! பசி...தாகம் எதுவுமே தெரியவில்லை....தேடல் வெறி ! இதைத் தாண்டிய வெறியுடன் சுவாமி விவேகானந்தர் இருந்திருக்கிறார் ...சிக்காகோ செல்வதற்கு முன்...சுவாமி பல ஊர்களுக்கும் அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் போது .... வறுமை சூழ்ந்த ஊர்களில்...கருங்கல் போன்ற ...கடிக்கவே முடியாத கடின ரொட்டியை இவர்களுக்கு கொடுப்பார்களாம்...பசியாற ! அதை துணியில் கட்டி எடுத்துக் கொண்டு ....பசிக்கும் நேரங்களில் ...குளம் போன்ற நீர்நிலைகளில் சிறிது நேரம் ஊற வைத்து .....கொஞ்சம் கொஞ்சமாக கடித்து உண்பார்களாம் ! அதற்கே ..பல் வலி கண்டு ...ஈறில் ரத்தம் கசியுமாம் !

செந்நீர் ஊற்றி வளர்த்த ஆன்மிகம் ! இன்று விவேகானந்தர் பிறந்த தினத்திற்கு பொருத்தமாக இந்த பத்தி அமைந்து விட்டது !

யோகி தொட்டுக் கொடுத்த 'பிரசாத சிகரெட்டை'...வீணாக்காமல் ஊத ஆரம்பித்தோம் ! மலையில் மிக சிலரையே காண முடிந்தது...ஆங்காங்கே ஒரு சில வெளிநாட்டு பெண்கள் தவம் செய்துக் கொண்டிருந்தனர் ! கூட வந்த நண்பர்கள் அனைவரும் அவர்களை வெறிக்கப் பார்த்து ...கிண்டல் செய்தனர் ! ஆன்மீகத்தை உய்விக்க..? வந்ததாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு கோபம் ஏற்ப்பட்டது ...வேண்டாம் ..என்றேன்...அவர்கள் கேட்கவில்லை ...அதிகமாக்கினர் ! அப்போது தோன்றியது....குழுவுடன் செல்ல இது மலையேற்றம் அல்ல....மனமேற்றம் ...அதற்க்கு தனிமையே சாலச் சிறந்தது ....இனி தனி பயணம் தான் என்று முடிவு செய்தேன் ! பிறகு ஒரு வழியாக ...அவர்கள் கவனம் திசை மாற்றி ...மலை உச்சிக்கு வந்தோம். அங்கிருந்து சாலையை பார்த்தோம்...பேருந்துகள் நகரும் ஊர்வனங்களாக தெரிந்தன....அந்த நேரத்தில் என் பெற்றோர் ஞாபகம் வந்தது...சொல்லாமல் ....கொள்ளாமல் >150km தாண்டி வந்திருக்கிறோம்....என்னை இந்த இடத்தில் பார்க்க வேண்டாம்.....இதையெல்லாம் கேள்விப்பட்டாலே மயங்கி விழுந்து விடுவர் ! கூட வந்தோர் விடுதி மாணவர்கள் என்பதால் ..அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் .... நிதி உதவி மட்டும் என்னுடையது !

திடீரென்று பாதை முடிந்திருந்தது....அதற்கு மேல் போக வழியும் தெரியவில்லை ....சிறிது தேடலுக்கு பின் வலது பக்கம் சரேலென்று கீழே இறங்கும் ஒரு பாதை தென்பட்டது....ஆனால் கொஞ்சம் அபாயகரமாயிருந்தது ! சரி வந்த வழியே திரும்பலாம் என்றால் ....அது 'வினை முடித்தன்ன இனியள் ' என்பதற்கு அழகல்ல என்ற சுய கௌரவ ஈகோ ! மலையேறும் போது செருப்பு அணியாமல் செல்ல வேண்டும் என்று ... வாசலிலேயே சொல்லி இருந்ததால் அதன் படி கையில் எடுத்துக் கொண்டு தான் நடந்து வந்தோம்...ஆனால் இந்த சரிவில் அதற்க்கு சாத்தியமில்லை என்று காலில் மாட்டிக் கொண்டு ...கவனமாக....இறங்கி விட்டோம் ! வழியில் ...தீபம் ஏற்றும் அந்த பெரிய கொப்பரை பார்த்தோம் .... மிகப் பெரிய அண்டா போல இருந்தது ! தேரின் வடக் கயிறு போல் ..பெரிதாக துணி சுற்றி திரியாக்குவார்களாம் !

"யாக்கை திரி .... காதல் சுடர் ! .... பிறவி பிழை....காதல் திருத்தம் ! " என்கிற வைர முத்துவின் வைர வரிகள் இப்போது தோன்றுகிறது ! ஆன்மிகம் காதலாக வேண்டும் ... காதலுக்கு எப்படி உள்ளார்ந்து தயார் ஆகி ... கசிந்துருகுகிறோமோ ..அது போல ! குரு - காதல் - ஆன்மிகம் .... மூன்றும் மனித வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்கள் ... மனிதன் முழுமையடைவதும் இவைகளால் தான் ! அடடே...ரொம்ப சொற்பொழிவாப் போய்கிட்டிருக்கே .....சரி...சரி ! மலை இறங்கு படலம் முடிந்த போது ...பொழுது சாய்ந்து விட்டிருந்தது ...மெலிதாக பீதி வந்தது....வீடு திரும்புவதற்குள் நள்ளிரவாகி விடுமே ! ஊர் வந்து சேரும் வரை யாரிடமும் பேசாமல்....மௌன சாமியாகவே வந்தேன்...."வீட்ல திட்டுவாங்கன்னு பயமாயிருக்கா" ,என்று நண்பர்கள் கேட்டதற்கு...இல்லை நான் தியானம் ? செய்துக் கொண்டிருக்கிறேன்....என்று Build - Up கொடுத்து விட்டு...மனசுக்குள் திக்..திக் என்றிருந்தேன் !

ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தோம்....நண்பர்களை பள்ளி விடுதிக்கு அனுப்பி விட்டு ...பேருந்து நிலையத்திலிருந்து வந்துக் கொண்டிருக்கும் போது "டன் ..டங் ..டன்...டன " என்று கொத்து புரோட்டா போடும் ....இனிய கானம்.... அருகிலுள்ள பரோட்டாக் கடையிலிருந்து கேட்டது ! வெளியில் போகும் போதெல்லாம் ...'என்னுதில்லே..' என்று ஒரு Emergency fund ஐ உள் நிஜாரில் எப்போதும் வைத்திருப்பது..... 'இப்போது' ஞாபகம் வந்தது ! யோகியை பார்த்திருக்கிறோம்....மலை ஏறி ...சாமி கும்பிட்டிருக்கிறோம்....'கவுச்சி' சாப்பிடலாமா...என்கிற யோசனை வேறு ! யோகிகள்...சித்தர்களே....கஞ்சா புகையை இழுக்கிறார்கள் ....அதை சிவ பானம் என சொல்கிறார்கள்....யாகத்தில் மாமிசம் படைத்திருக்கிறார்கள் ....ஸ்ரீ ராமனே குகன் கொடுத்த மீனை ..தேனுடன் கலந்து உண்டிருக்கிறார்....ஆகவே அசைவம் ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என்கிற பேரரிய சிந்தனையை ...என் காதில் ..சாட்..சாத்..தான் ஓதியது ! மதிய உணவு அருந்தாதது வேறு ..... ஏதோ ஒரு மாமாங்கம் சாப்பிடாதது போல் இருந்தது ! கடைசியில் ..... எப்போதும் போல் வாய்மை...சாரி ...வயிறு வென்றது !கடையின் உள்ளே சென்று....புரோட்டா...ஆப் பாயில் ...ஈரல் என்று சிக்கனமாக உணவை முடித்துக் கொண்டு....தாமதமாக வருவதால் ...வீட்டில் கிடைக்கப் போகும் பாட்டுக் கச்சேரிக்கும்....குத்து வரிசைக்கும் ...உடலையும் மனதையும் தயார் செய்துக் கொண்டு....தெம்புடன் அழைப்பு மணியை அடிக்க ஆரம்பித்தேன் !

ஆன்மீகப் படலம் -1 முற்றிற்று !

நாவல் டூ திரைக்கதை


நாவல்கள் திரைப்படமாகும் போது ....திரைக்கதை என்கிற பெயரில் ... நாவலின் சாராம்சமே உருமாறி .... திரைப்படமாக வரும் அபாயம் உண்டு !

பொதுவாகவே எழுத்தாளன் தன் கதாபாத்திரத்தின் குணத்தை மிக Rawஆக தான் பதிவு செய்து இருப்பான் ... நாவலில் அது மிக்க ஆளுமையுடன் இருந்திருக்கும் ! ஆனால் அதுவே .... திரையில் கொஞ்சம் நீர்த்துப் போய் விடும் !

உதாரணத்திற்கு.....'விக்ரம்' படத்தில்...கதாநாயகன் கமலிடம் ...நாயகி லிஸி (இப்போது இயக்குனர் ப்ரியதர்ஷனின் நாயகி) "ஆண்களுக்கு இணையா ...பெண்கள் எல்லாத்தையும் செய்வார்கள்" , என்று ஜம்பமாக சொல்வார்.மனைவி கொலை செய்யப்பட்ட விரக்தியில் வாழும் கமலோ ...கடுப்பாகி...: " எங்களுக்கு வேர்த்துச்சுனா போட்டிருக்குற சட்டையை கழட்டிக்கிட்டு ரோட்டுல நடந்து போவோம் ...நீங்க போவீங்களான்னு ..? ",கேட்பார் ! அதற்கே வெகுண்டு " நாகரீகம்...பண்பாடு இல்லாத ஆள் நீ ", என்று திட்டுவார் நாயகி !

ஆனால் இதே உரையாடல் ...மூலக்கதை 'விக்ரம்' நாவலில் ....கதாநாயகன் 'கீழ்க்கண்டவாறு' பேசுவான் ....

"அப்ப , நீங்க சுவத்துல ஒன்னுக்கு அடிப்பீங்களா " ! Bravo ...Writer ...

சுஜாதாவின் நினைவு தின (27 Feb ) பதிவு ! .

பிகு: ஆனால் , இன்னொரு காட்சியில் .... நாவலில் வருவது போலவே ,கமல்... "எந்த தே****பய என் பொண்டாட்டியைக் கொன்றான் ? "என்று கேட்பார் ! அந்தக் காட்சி வசனப் பதிவை கட் செய்யாமல் இருக்க ... 'சென்சார்களிடம்' எவ்வளவு கெஞ்சியிருப்பாரோ ..!?

சிவனும்... சூலமும் !!

சிவன் கையில் சூலாயுதம் எதற்கு என்று நண்பர்கள் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன் !

......நான் ஆத்திகனும் அல்ல...நாத்திகனும் அல்ல ....

கொலை செஞ்சா தான் கையில ரத்தம் இருக்குமா .....பிரசவம் பார்த்த கையிலும் ரத்தம் இருக்கும் ! (நன்றி : ஜெயமோகன் )

அது போல சூலாயுதம்....இன்னபிற ஆயதங்களை கடவுள் வைத்திருப்பதற்கும் சூட்சம காரணங்கள் இருக்கிறது !

எல்லாம் ... எல்லோர்க்கும்.... எப்போதும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம்..... தேவை இல்லாத ஒன்று என்றே உணருகிறேன் !

கடவுள், வழிபாடு என்பதெல்லாம்.....ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கையைக் கொண்ட விஷயம் !

எல்லா கடவுளையும் வணங்குவேன், ஒரே கடவுளை மட்டும் தான் வணங்குவேன் , எந்த கடவுளையும் வணங்க மாட்டேன் , என்னை மட்டுமே நம்புவேன் !

Fine ! பக்குவப்பட்ட நபர்களாயின் ...தன்னை மட்டும் நம்புவோர் .... அவர்களையே வழிபடுவோர் ஆவர் ....'நானே கடவுள்' போல !

நாத்திகம் பேசும் விஞ்ஞானம் .... இன்னும் பூமி சுழற்சிக்கு, தெளிவான....உறுதியான காரணம் கூற முடியவில்லை !

மனிதர்களில் தலைசிறந்த சிந்தனாவாதி , விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறுகிறார் "கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடவில்லை !"

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும், நடக்கும் ஒரு மிகச் சிறிய விஷயத்திற்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது சும்மா நடப்பதில்லை செயல்களும்,அதன் விளைவுகளும் !

Tuesday 5 March 2013

நர மாமிசம்

வானம் முன்பைக்கும் சற்று கருமை கூடியிருந்தது .....உலகமே வெட்ட வெளியாயிருந்தது ......ஆங்காங்கே ஒரு சில பழைய கட்டிடங்களும் . தென்பட்டன.மற்றப்படி எங்கு காணினும் ...... எலும்புக் கூடுகள் ....மண்டை ஓடுகள்....பிணங்கள் ...பிணங்கள்...அழுகிய பிணங்கள் தான் !பிணங்களின் கடைசி துணுக்குகளை தின்றுக் கொண்டு முழு எலும்புக் கூட்டின் பிறப்பிற்கு வழி வகை செய்யும் அந்த உயிரினங்கள் ...ஓ ...நாய்கள் ! பல்லாயிரக்கணக்கான வருடங்கள் மனிதனை பின் தொடர்ந்து ஓடி ....இதோ அந்திம காலம் வரை வந்திருக்கிறது !

ஒவ்வொரு ஊரின் நடுவேயும் மிகப் பெரிய கோட்டை இருக்கிறது .....பல ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டை ஆண்டோரின் வாரிசுகளுக்கான இடம் அது !அந்தக் கட்டிடமே ஒரு மிகப் பெரிய மருத்துவமனை தான் ! பிறக்கும் குழந்தையே 108 வியாதிகளுடன் தான் பிறக்கிறது.....அத்தனை மருத்துவ வசதிகள் இருந்தும் நூற்றுக்கு 10 தேறினாலே அதிசயம் தான் ! இறந்தாலும் ஒன்றும் பிரச்சனையில்லை .....அது என்றாவது நடக்கும் விருந்தில் முக்கிய இடம் பிடிக்கும் ! குழந்தைக் கறி தான் எப்போதாவது.....மற்றப்படி இன்றைய தினத்தில் மனித மாமிசம் மட்டும் தான் தங்கு தடையின்றி கிடைக்கிறது ! நேற்று கூட ஒருவன் ..."பல நாட்கள் சாப்பிடவில்லை ....ஏதேனும் உதவுங்கள்", என உயிரை விடத் துணிந்து...கட்டிடத்தின் வாசலில் பலகீனமாக கேட்டான்....பிறகு அவனுக்கு நல்லுணவுகள் கொடுக்கப்பட்டு .... பின்னர் அவனிடம் கையொப்பமமும் வாங்கிக் கொண்டு ..... செரிக்க சில ஷணங்கள் கொடுத்து ...மலம் வரும் முன்பே வெட்டப்பட்டு ... துண்டுகளாக்கப்பட்டான் .துண்டுகளாக்கும் போது மலத்தைப் பிரித்து கறியை சுத்தம் செய்ய நேரம் ஆகிறது என்று நாற்றம் பொறுக்காத சமையற்காரர்கள் காரணம் சொன்னதால் இந்த ஏற்பாடு !இதிலும் சிறந்த இன்னொரு பலியும் உண்டு! போன வாரம் ஒருவன் குடும்பத்தோடு வந்திருந்தான் ....இதே பசி கதை .....நெடுந்தூரத்திலிருந்து வந்திருப்பார்கள் போல .....அவனைத் தவிர அனைவரும் மயங்கி சாய்ந்தனர்....மனைவி , இரு பெண் குழந்தைகள் !

வெளியில் தான் உணவுக்கு மாந்தர்கள் ......கட்டுப்பாடில்லாமல் அடித்துக் கொண்டு....கொன்று....கொன்று வாழ்கிறார்கள்.ஆனால் கோட்டையில் வசிக்கும் ஆண்ட வாரிசுகள் (இவர்களை இனி சுருக்கமாக ஆ.வாக்கள் ) எல்லாவற்றையுமே முறைப்படி தான் செய்வார்கள் .....உணவுக்காக உணவாகும் மனிதனிடம் ...நியாயமான தஸ்தாவேஜுகளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் கொல்வார்கள். ...பதப்படுத்தப்பட்ட கறிகளுக்கு மேற்கிலிருந்து வரும் ஆட்களிடம் ஆதாரம் காட்ட வேண்டும் ...இல்லையெனில்...,இருக்கும் பெண்பிள்ளைகளை அழைத்து சென்று விடுவர்....எதிர்த்தால்.....சிறு கடுகென இருக்கும் மருந்தை எறிந்தால் ...மொத்த கட்டிடமும் தரை மட்டம் !

இன்றளவும் தமது முன்னோர்களை நினைத்து பேரானந்தம் கொள்வர் ஆவாக்கள் ! பின்னே....இன்னும் 30 தலைமுறைக்கு.... இன்றும் மிச்சமிருக்கும் உணவுப் பொருட்களும் ....தண்ணீர் ஆதாரங்களும் இவர்களுக்கு மட்டுமே என்று .! குடும்பத்துடன் வந்த மனிதன் வறுமையிலும் ஓரளவு சதைப்பற்றுடன் இருந்ததால் .....ஆவாக்களுக்கு ஒரு யோசனை தோன்றியது....எத்தனை நாளைக்கு தான் சதைப் பற்றில்லாத ...வெறும் எலும்பில் ஒட்டியிருக்கும் சதையை கடித்துக் கொண்டிருப்பது எவ்வளவு வேதனையான விஷயம் !வாழ்நாள் முழுதும் அவன் குடும்பத்திற்கு உணவிட ...உறுதிப் பத்திரம் தயார் செய்யப்பட்டு....அவனுக்கு நல்லமுது படைக்கப்பட்டு....உடல் உள்ளேயும் நன்கு எரிய... எண்ணெய் சொட்ட...சொட்ட பலகாரங்கள் கொடுக்கப்பட்டு தீக்குளிக்கப்பட்டான் !

கறி நன்கு வெந்திருந்தது ....நீண்ட நாட்களுக்குப் பிறகு....ஆவாக்களுக்கு நல்லதோர் விருந்து ! அவன் மனைவி மக்களுக்கும் கரிசனமாக ...அவனின் விரை கொட்டையும் , குத சதையும் முறையே பரிமாறப்பட்டு....தாய் ஒரு மூலையிலும் ...பிள்ளைகள் ஒரு மூலையிலும் பிரிக்கப்பட்டனர் !இனி தாய்க்கு ஓய்வு ஒழிச்சலில்லாமல் வேலை இருக்கும் ....தொடர்ந்து அவள் மேல் இயங்கிக் கொண்டிருப்பனர்....தலைமை மருத்துவர் சொல்லும் நாள் வரை....பின்னர் குழந்தை பெற்று முடித்ததும் .....அடுத்த இயக்கங்கள் தொடரும் ! ஜீவ உருவாக்க சக்தி இருக்கும் வரை தான் அவள் ஜீவன் இருக்கும் ...பிறகு...அவளை விருந்தில் காணலாம் ! பெண்பிள்ளைகளைப் பொருத்தவரை ...அவை மிகப் பெரிய சொத்துக்கள்....அவை பருவமெய்த அடுத்த நொடியிலிருந்து வேலை பளு கூடி விடும்....ஆவாக்களின் வயோதிக வாரிசுகளுக்கு...மாற்று உறுப்புக்கும்.....பாதுகாப்புக்கு வீரர்கள் உருவாக்கவும் .....குழந்தைகள்..குழந்தைகள் ..நிறைய ...நிறைய தேவை ! வெளியில் உணவுக்கு வேட்டையாடப்படுவதால் ...ஆவாக்களின் உடல் வேட்கைக்கு ஒத்துக்கொண்டு கோட்டை வாசலை அண்டுவர் !

காலங்கள் சென்றன....ஆவாக்களின் வாரிசுகள் குறைய ஆரம்பித்தனர்....அவர்களின் ரத்த சம்பந்தம் இல்லாத ஒரு படை கோட்டையிலேயே உருவாகியிருந்தது....உள்கோட்டைப் போர் உருவாயிற்று...! பிடிக்கப்பட்ட எதிர்ப்பாளர்கள் உயிருடன் தோலுரிக்கப்பட்டு....அவர்களின் எதிரிலேயே அவரவர் உறுப்புகள் வெட்டப்பட்டு..... ஒவ்வொன்றாக உண்ணப்பட்டன.! எதிர்த்த பெண்களின்...தொடை,கால் ,கைகள் மட்டும் ,வெட்டப்பட்டு ...ஏனைய உடல் பாடம் செய்யப்பட்டு .....பருவ வயது ஆவாக்களின் விளையாட்டு பொம்மைகளாக்கப்பட்டன.நிலவறையிலிருந்த மேற்கத்திய வெடிபொருட்களை திருடி வைத்து எதிர்ப்பாளர்களும் சளைக்காமல் போரிட்டனர் ! அதிலும் பெண்கள் ....தத்தம் மலப் புழையில்.... வெடிமருந்து அடங்கிய குழாயை சொருகி ...காலை விரித்துப் படுத்துக் கொள்வார்கள்....புழை என்பது போய் ...ஏதேனும் துவாரம் இருந்தால் போதும் என்று ரத்தம் அருந்திய மயக்கத்தில் ஆவாக்கள் நெருங்குவர் . அவளின் நவதுவாரங்களும் உபயோகத்தில் இருக்கும் நேரத்தில் வெடிக்கச் செய்வாள்......உடல்கள் சுக்கல் சுக்கலாக காற்றில் பறக்கும்.இதே போல் ஒவ்வொரு முறையும் நடந்தது ....உள்ளிருக்கும் வெடியை பற்றி ஆவாக்கள் அறிந்திருக்கவில்லை....எதிர்ப்பாளன் எவனோ வெடி வீசியிருக்கிறான் என்றோ .....மேற்கத்தியர்கள் ஏதேனும் நவீன சதி ஆயுதம் ஏவுகி றார்களோ..., என்றே நினைத்துக் கொண்டிருந்ததால் ...பணி செவ்வனே நடந்துக் கொண்டிருந்தது !

இது வரை கோட்டையைத் தாண்டி மலம் வெளியில் விழுந்ததில்லை.! ஆனால் வெளியிலோ, என்றுமே .... உண்டால் தானே வெளிவர? எனினும் ..சிலநாட்களாக....மலம்...சதை....ரத்தம் கலந்த வஸ்துக்கள்.....வாஸ்து பார்க்காமல் நாலாபுறமும் வந்து விழ தொடங்கி விட்டது !.இது வரை ரத்த வாடை மறந்திருந்த கொசுக்கள்....தேடி வந்து....சதை துணுக்குகளில் ஒட்டியிருந்த ரத்த துளிகளை ஆவேசமாக உறிஞ்சின ! நெடுந்தொலைவிலிருந்து பன்றிகள் வந்து ...கறியுடன் கலந்த மலத்தை மட்டும் தனித்து நக்கி ....ஆர்வத்துடன் சத்தமிட்டபடி ..சப்பி சப்பி சாப்பிட்டன ! புது விருந்தினர்களால் தன் பங்குக்கு பாதகமில்லை என்று நாய் உணர்ந்துக் கொண்டு....ரத்தமும் , மலமும் எடுக்கப்பட்ட சுத்தமான கறியை ...எலும்பு துணுக்குகளோடு ...நர..நர வென கடித்து தின்று விட்டு....இடை இடையே சந்தோஷமாக ஊளையிட்டது !



வானம் இப்போது சற்று கருமை குறைந்து ....கொஞ்சம் வெளிச்சக்கீற்று தென்பட்டாற் போலிருந்தது !

ஆயுத பூஜை


தலைமைப் பண்பு என்பது இயற்கையாக ...பிறப்பிலேயே உருவாகுவதா அல்லது வளர்ப்பில் ஏற்படுவதா என்கிற வாதம் ....உலகளவில் முடிவுறாத வாதமாக இன்று வரை இருந்துக் கொண்டிருக்கிறது.அதில்... நிபுணத்துவம் என்கிற விஷயத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.தலைமைப் பண்பு என்பது எப்படி இயற்கையாகவே சிலரிடம் அமைந்து இருப்பது போல் ..பல நிபுணர்களும் பிறப்பிலேயே உருவாகி விடுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒரு சிறு சம்பவம் , வெளிநாடுகளிலிருந்து வாங்கி வரும் விஷயங்களில் அதி முக்கியமான ஒன்று மது வகைகள்...அதில் அதிகம் கோலோச்சுவது 'ஜானி வாக்கர் ' என்று அனைவராலும் கொண்டாடப்படும் சரக்கு ! சராசரியான ஒரு விலையில் (இப்ப கொஞ்சம் ஏறிடுச்சு) ஓரளவு மரியாதையான சரக்காக கருதப்படுகிறது.ஆளுக்கு ஏற்றார் போல் வாங்குவதற்கென்று .... ரெட்,ப்ளாக் ,கிரீன்,ப்ளூ லேபல் என்று பல வகைகளில் விற்கப்படுகிறது.இதில் ப்ளூ லேபல் 1/2 பாட்டிலே 4,000 ரூ.என்கிறார்கள்.Red Label புல் பாட்டிலே ஆயிரத்து சொச்ச ரூபாயில் வாங்கி விடலாம்.உலகத் தரம் வாய்ந்த சரக்கு இந்த விலையில் கிடைப்பதால் ,வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களின் எதேச்சதிகார சரக்காக கொண்டாடப்படுகிறது !

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வினோதமான பிரச்சனை ஏற்ப்பட்டது...சென்னையில் 'ஜானிவாக்கரை' மொத்தமாக விற்பனை செய்பவர்களிடமிருந்து சிறு வியாபாரிகள் வந்து, சரக்குகள் வாங்காமல் தேங்க ஆரம்பித்து விட்டன...ஆனால் சிறு வியாபாரிகள் எப்போதும் போல் சரக்கை விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு சரக்கு எப்படி கிடைக்கிறது என்று கேட்ட போது விமான நிலையத்திலேயே சில ஏஜென்ட்கள் .... அங்கிருந்து வருபவர்களிடம் பணத்திற்கு வாங்கி வந்து இங்கு விற்று வருவதாக கூறியுள்ளனர்.மொத்த விற்பனையாளர்களும் இதே முறை .. மற்றும் 'குருவி' மூலம் தான் சரக்குகளை பெற்றுக் கொள்வதாக கேள்வி ! இந்த மாதிரியான சூழ்நிலையில் .. கம்பெனிக்கே அதன் விற்பனையில் குறைவு இருப்பதாக உணர்ந்து அதன் Representative ஐ இங்கே அனுப்பி இருக்கிறது...அவரும் இங்குள்ளோர் சொல்லுவதைக் கேட்டு விசாரித்து உள்ளார். அப்போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது .... வியாபாரிகள் மற்றும் பலருக்கு விற்பனை செய்ததது ஒரே ஆள் தான் என்பது தான் அது ! பொறி வைக்கப்பட்டது...ஆள் பிடிப்பட்டார்.. ! அவரை விசாரித்த போது கிடைத்த தகவல்களை கேட்டு அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர் ! நூற்றுக் கணக்கான பாட்டில் சரக்குகளையும் அவரே தயாரித்து விற்று வந்திருக்கிறார்.அவர் கையில் இருந்த சில சரக்குகளை சோதனை இட்டு அசந்து போயினர் ...Rep .பையும் சேர்த்து ! கொஞ்சம் கூட அவர்களால் போலி மது என்று சொல்ல முடியவில்லை ! அவ்வளவு தரத்துடன் விளங்கி இருக்கிறது .... ஆர்வம் அதிகமாகி அவரை அழைத்து கொண்டு அவரது குடிசை தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார்கள் ... அங்கு மிக சாதாரணமான ஒரு வீட்டில் 'கலவை' தயாரிக்கப் பட்டுகொண்டிருந்தது ! ஒரு பெரிய அண்டா...அதன் பக்கத்தில் சிறு..சிறு...குண்டான்களில் சில..சில வஸ்துக்கள்... அந்த அண்டாவில் உள்ளதை கரைப்பதற்காக ஒரு பெரிய கிண்டியுடன் ஒரு 'கரைப்பாளர்....! இவ்வளவு தான் தொழிற்சாலை ! இவற்றை வைத்து கொண்டு உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனத்துடன் போட்டி போட்டுள்ள அவர் பள்ளி இறுதியை தாண்டவில்லை ! எப்படி செய்தீர்கள் என்று கேட்ட போது,அவர் கலவை ரகசியத்தை சொல்லாவிட்டாலும் ... அதில் ஒரிஜினல் ஜானிவாக்கரும் .. கொஞ்சூண்டு மூலப் பொருளாக சேர்ப்பதாக மட்டும் கூறியிருந்தார் ! நம்ம "மூலிகை பெட்ரோல் .. ராமர் பிள்ளை " ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல !

Perfume என்றொரு பிரெஞ்சு படம்...அதில் கதாநாயகன் பிறந்த நொடியே ..கண்கள் கூட திறக்க திறந்திருக்காது...ஆனால் அருகில் உள்ளவரின் விரலை ..சரியாகப் பிடித்து ... நிதானமாக முகர்ந்து பார்ப்பான் ! அவனுக்கு பார்வையை தாண்டிய புலனாக.... நுகரும் சக்தி இருக்கும் ... எப்படி என்றால்...அவன் கண்ணை மூடி, படுத்துக் கொண்டே ...பக்கத்தில் உள்ள செடி, புல் ,..நீர்நிலை...கூழாங்கல் ...என்று தொலைவில் உள்ள பொருட்களை கூட மோப்பத்தின் மூலம் கண்டுக் கொண்டு, சொல்லிக் கொண்டே இருப்பான் ! வாசனை திரவம் தயாரிக்கும் ஒரு மிகப் பெரிய வல்லுனரை சந்தித்து ..வேலைக்கு சேர கோருவான் ! இவன் தோற்றத்தைப் பார்த்து ...திறமை அறியாமல் ...அவன் எதிரே...ஒரு கண்ணாடி குப்பியில் ...பல தரப்பட்ட வஸ்துகளை ...மிக கவனமாக..சிறிது ..சிறிதாக சேர்த்து ...ஒரு அற்புத வாசனை திரவத்தை செய்துக் காட்டி விட்டு ....இதற்கு தான் பல ஆண்டுகள் உழைத்ததாக சொல்வார் ! நம்ம கதாநாயகன் .. அதை நன்கு முகர்ந்து விட்டு .. . பின் ஒரு காலி குப்பியை எடுத்துக் கொண்டு...ஒரு பெரிய பாத்திரத்தில் .. தாறு மாறாக ...பல குடுவைகளிலிருந்து ...ரசங்களை மாற்றி..மாற்றி..ஊற்றி ...அதில் கூட ..குறைத்து ...பின் அந்த குப்பியில் ...ஒரு சில வினாடிகளில் ...வல்லுனர் தயாரித்த நறுமண திரவத்தை விட சிறப்பாக தயாரித்து ...வேலைக்கு சேர்ந்து விடுவான் !

போலி மதுவை தயாரித்த அந்த மனிதர் , செய்தது தவறு என்றாலும் .. அவரது திறமையை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது ! அவரது தவறுக்கு தண்டனை கொடுக்கும் சமூகம்...அவரது திறமைக்கு அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் ! என்னைக் கேட்டால் ஜானிவாக்கர் கம்பெனியிலேயே R & D பிரிவில் ஒரு கௌரவ ஆலோசகர் பதவி கொடுத்திருக்கலாம் , கம்பெனிக்கு நிச்சயம் உபயோகமாயிருந்திருக்கும் ! சரியான அங்கீகாரம் கிடைத்திருந்தால் .. அவர் அந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் ! ஆனால் இங்கு நம் நாட்டில் ...வாழ்வாதாரத்தை ஓட்டுவதற்கு ...என்பதை விட நன்கு சம்பாதிப்பதற்கு அவசியம் டிகிரி முடிக்க வேண்டும் ..என்பதாக கற்பிதம் செய்யப்படுகிறது ! நான் எதற்கு BE ., EEE ..எடுத்து படித்தேன் ..என்று இன்று வரை ..எனக்கு புரியவில்லை.! அது சமயம்...பொறியியல் அல்லது மருத்துவம் படித்தால் மட்டுமே...வாழ்க்கையில் உயரலாம் என்று எடுத்துக் கொடுக்கப்பட்டது ...சுற்றத்தார் மூலம் ! "நான் படிச்சதுக்கும் ...செய்யற வேலைக்கும் சம்பந்தமேயில்லை ", என்று சொல்லி கொள்ளும் லட்சக்கணக்கான அடியார்களுள் ..அடியேனும் ஒருவன் ! ..செய்யும் வேலைகளின் போது ...என் படிப்பு சம்பந்தப்பட்ட வேலை யில் ஈடுபடும்
சமயங்களில் மட்டும் கிடைக்கும் திருப்தி இருக்கிறதே ...அட.டட டா ! இருப்பினும் மனசாட்சி கேட்காமல் ... செய்யும் வேலைக்கு ஏற்ப ...சமீபத்தில் MBA வும் படித்து முடித்து கணக்கை நேர் செய்தாயிற்று ! வேலையில் சேர்ந்த பிறகு...அந்த வேலைக்காக படித்து முடிக்கும் 'அட்டு ஊழியங்கள் ' இங்கு தான் நடக்கும் !

சிறு வயதில் 'பயங்கர புத்தக வெறியனாக' இருப்பேன் ... வெறி...என்று ஏன் சொல்கிறேன் என்றால்...காமிக்ஸ்., எழுத்துக் கதை ., எல்லாம் தாண்டி ...பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சனை சம்பந்தமான புத்தகங்களை கூட விட்டு வைத்ததில்லை ... என்றால் பார்த்துக் கொள்ளுங்கள...ஏழாம் வகுப்பில் ! எல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்...எதுவும் தெரியாமல் இருக்கக் கூடாது ... எண்ணம் எல்லாம் சரி...ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ...பரவலான விஷயத்தை நிறுத்தி ஒரு சில விஷயங்களில் மட்டுமே உழைப்பை குவிக்க வேண்டும் என்ற காலம் தவறிய ஞானம் எனக்கு தாமதமாகத் தான் தெரிந்தது ! எனக்கெல்லாம் சிறு வயதில்.... ஒரு பெரிய நூலகம் அமைத்து ...அதை என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று தான் ஆசை ! அப்போதே வீட்டில் பெட்டி பெட்டியாக ...நூற்றுக் கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருப்பேன் ! கல்லூரியிலும் அதே போல் .. படிக்கிறேனோ இல்லையோ அனைத்து பாடப் புத்தகங்களையும் வாங்கி வைத்து விடுவேன் ... Bookomania ! புத்தகங்கள் எனக்கு பழைய திரைப் பட நாயகிகள் மாதிரி ... அதை படித்து 'முடித்ததும் ' ...அவை எனக்கே சொந்தமாகி விட வேண்டும் ....வேறு யாருக்கும் கொடுக்க மாட்டேன் ! இப்படிப்பட்ட நான் ...சம்பந்தமேயில்லாமல்.ஒரு 24x 7 + 365 நாட்களும் வேலை உள்ள தொலை தொடர்ப்பு நிறுவனத்தில் ஊழியம் செய்கிறேன் . எனது ஆறாம் விரலாக செல்பேசி...அது அழைக்கும் போது ...சில வினாடி தாமதமாக ..நான் அதை எடுத்தாலும்...எனது பல வருட நற்பெயர் ...கெட வாய்ப்புண்டு ! தகவல் அலாரம் முதல் நிறுவனத்தின் CEO வரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அழைக்கக் கூடும் ! எங்கள் வீட்டு கழிவறையில் பிரஷ் வைக்கும் சிறிய ஸ்டாண்ட் ஒன்று தொங்கும்...வருபவர்கள் இங்க எதுக்கு இது என்பார்கள்...பாவம்...அவர்களுக்கு ..என் செல் பேசிக்கான இடம் அது என்று எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை ! இவ்வளவு பெரிய பருப்பு ...சாரி பொறுப்பில் இருக்கிறான் ...சரி..லட்சக்கணக்கில் சம்பளம் என்று நீங்கள் ..நினைத்தால் ..ஏமாந்து போவீர்கள் ... சில ஆயிரங்களுக்கு தான் இந்த அக்கப் போரே ! அதற்க்கு காரணம்...எனது 'பரவலான ' ஆர்வத்தில்... எங்கெங்கோ ஓடி...தாமதமாக புரிந்து...ஒரு விஷயத்தில் குவித்து ...வேலையில் சேர...அதே...அதே... காலம் கடந்த அறிவு ?என்னை சிறந்த நிர்வாகி என்று Appraisal ...பாராட்டு பத்திரங்கள் என்று ஏக மரியாதை...ஆனால் அவை எல்லாம் நான் வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சியுடன் உழைத்ததற்கு கிடைத்தது ...அதைப் பிடித்து செய்தேனா என்றெல்லாம் கேட்க கூடாது....ஆனால் கார்பரேட்டுக்கு பிடித்த மாதிரி செய்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம் !
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே...சன் ..டிவியில் பெரிய அதிசயமாக...பொருத்தமான ஒரு படமாக போட்டிருக்கிறார்கள் !
'மாலை நேர மயக்கம்' - செல்வராகவன் .... படத்தில் , தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கும் புகைப்படகாரரான தனுஷிடம் ...வேற 'பொழப்பை' பார்க்க அறிவுரை சொல்லப்படும் ....அப்ப அவர் சொல்லுவார் " பிச்சைக்காரனாயிருந்தாலும் , பிச்சைக்கார போட்டோகிராபராயிருப்பேன் ! ", என்பார் ! மனதில் ஆழ.... கடப்பாரையால் கிளறியது போல் இருந்தது ! திரைப்படம் தான் என்றாலும் ...சில நல்ல விஷயங்களை நாம் மறுக்கக் கூடாது...மறக்கக் கூடாது ! அந்த படத்திலேயே இன்னொரு காட்சி வரும்...பெரிய புகைப்பட நிபுணராக ஆவதற்கு...வெறியுடன் அலைந்துக் கொண்டிருப்பார் தனுஷ்.......ஒரு உலகபுகழ் நிபுணரிடம் உதவியாளராக சேருவதற்கு...பயங்கர ரிஸ்க் எடுத்து ...Wild Photography க்காக காட்டிற்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். அப்போது ஒரு அழகிய..அபூர்வ...பறவை ஒன்று...மரத்தில் வந்து அமரும் .தனுஷ் அதை படம் எடுக்க விழைகையில் .....அது மிக நிதானமாக தன் இரு இறக்கைகளையும் விரித்து...." இந்தா ...நல்லா எடுத்துக்க " என்று சொல்வது போல் அப்படியே இருந்துக் கொண்டிருக்கும் ! மிக அபூர்வமான நிகழ்வு அது ! சாதாரணமாக எடுக்க இருந்த புகைப்படத்திற்கு இப்படி ஒரு அபூர்வ காட்சி கிடைத்ததை பார்த்து ...தனுஷ் ஸ்தம்பித்து போய் இருப்பார் , அப்போது மரத்திலிருந்து...ஒரு இலை பறந்து வந்து...தனுஷின் தலையில் விழுந்து...முகத்தை வருடியபடி கீழே விழும் ! அது ஒரு உண்மை கலைஞனுக்கு இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் போல் எனக்கு தெரிந்தது...பின் தனுஷ் நிதானமாக அந்தப் பறவையை எடுக்கத் தொடங்குவார் ! பின்னாளில் அந்தப் படங்கள் தான் அவரது திறமையை அவருக்கே புரிய வைக்கும் ! இந்த கவித்துவமான காட்சியை நான் மெய் மறந்து ரசித்து...ஆனால் பிறகு அழுவேன்...ஒவ்வொரு முறையும் ! ஏன் என்று யோசித்தால் ....புரிகிறது.... படம் முடிந்து விட்டது !
-----------------------------------------------------------------------------

இவர்களை போல்.... ஒரு வாழும் கலைஞரையும் தெரியும் ..அவர் 'கள்ளு அண்ணன்' ..ஆம்...கள் இறக்கும் தொழிலாளி ..பல வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்தில் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார் ! உழைப்பு என்றால் அப்படி ஒரு உழைப்பாளி...எப்போது பார்த்தாலும் ...ஏதேனும் வேலை செய்து கொண்டேயிருப்பார்... மரத்தை...மார்ப்பில் அணைத்து ஏறி..ஏறி...மார்ப்பும் ..கைகளும் ...உறுதியாகி ...அவரே ஒரு மரம் போல் தான் இருப்பார் ... அதை எப்படி சொல்ல வேண்டும் என்றால்...வெட்டுவதற்கு முன்பு...அருவாளை கைகளிலும்...மார்ப்பிலும் ..தீட்டிக் கொண்டு Warm up செய்த்துக் கொள்வார் ! அவர் புறங்கைகளும் ...மார்ப்பும்...காப்பு காய்ந்து போய் ...சொர...சொரவென்று... பாறை போல இருக்கும் ! அதில் ரத்தம் ..நரம்பெல்லாம் இருக்கிறதா என்று சந்தேகமாயிருக்கும்! Pure Professionalist ! இவருக்கும் எங்கள் நண்பர்கள் குழாமுக்கும் உள்ள 'கள்ளுத் தொடர்ப்பை ' பிறிதொரு சமயம் தனி பதிவாக சொல்கிறேன் ! இப்போது கள் தடை செய்யப்பட்டதால் அவர் திருநெல்வேலி அருகே உள்ள சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார்...'வாழ்வாகாரம்' !
இவ்வளவு சூழ்நிலையிலும் நம் நாட்டில் இலக்கிய ஆர்வமும் இருந்து கொண்டிருப்பது ஒரு எட்டா.. ம் அதிசயம் ! ஆனால் இங்கே இலக்கியம் படைக்கக் கூட...நாம் வேறு ஏதேனும் ஒரு வாழ்வாதார பாதுகாப்பு கூடாரத்தில் இருந்துக் கொண்டு தான் படைக்க முடியும் ! பாரதி முதல் சமீபத்திய கோபிகிருஷ்ணன் வரை...பல Catalystகள் இதை நமக்கு புரிய வைத்துள்ளனர் ! வழக்கம் போல் முடிக்காமல் ...பாதியிலேயே Draft ல் ...இதுவும் தங்கி விடும் என்று நினைத்தேன்...நல்ல வேளை ...இன்று ஆயுத பூஜை என்பதால்..வந்த செல் அழைப்புகள் எல்லாம்...வாழ்த்துகளுக்கும்...பூஜை அழைப்புகளுக்கும் மட்டுமே இருந்ததால் ... முடிந்தது...ஆயுத பூஜைக்கு ஆயத்தமாகிறேன் !