Monday 10 June 2013

தொடை தொடையாம் முந்திரிக்கா .... ! இந்திய சினிமாவின் நூற்றாண்டு சிறப்பு பதிவு !



தமிழ் திரையுலகில் பெண்களுக்கு சற்றும் சலியாமல் ஆண்களும் கவர்ச்சி காட்டுவது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது .இப்போதைக்கு ,நம்ம சசிகுமார் தான் தொடை தெரிய கவர்ச்சி காட்டிக் கொண்டு இருக்கிறார் ...குட்டிப்புலி படத்தில் ! குட்டி புலி என்பதாலோ என்னவோ...அவர் தொடை சற்று சூம்பி போய் சின்ன தொடையாகத்தான் உள்ளது ! தமிழ் சினிமாவில் .உண்மையான தொடையழகு தம்பிரான்கள் யார் யார் என்று இன்றைய தமிழ் சூழலுக்கு மிகத் தேவையான ஒரு விஷயத்தைப் பார்ப்போம்.

நம் முதல் கதாநாயகர் தியாகராஜ பாகவதரை எடுத்துக் கொண்டால்...இவர் பெரும்பான்மை சமயங்களில் வேஷ்டி போல கட்டி இருந்தாலும் ... தாவணி விலகா பெண்ணாய் ...தொடை காட்டாமல் தான் நடித்திருக்கிறார் , அடுத்து சின்னப்பா போன்றவர்களும் கூட அப்படித்தான் ! மற்றப்படி பாகவதர் முதல் தனுஷ் வரை மார்பு காட்டி நடித்திருந்தாலும் ... அதை ஒரு பெரிய விஷயமாக ...பெண்களுக்கு எதிரான ஒரு 'போட்டிக் கவர்ச்சி' என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த 'தொடை காட்டும் படலத்தை' முதன் முதலில் தொடங்கி வைத்தது நம்ம MGR தான் என்று சில..பல ஆராய்ச்சிக்குப் பின் அறிய முடிகிறது.வில்லனுடன் மோதும் போது ... சரேலென்று அணிந்திருக்கும் வேஷ்டியை முன்னே நெகிழ்த்தி ... பின்னால் சொருகி தார் பாய்ச்சு கட்டு கட்டுவார் (அது என்ன தார் பாய்ச்சு .... ரோடா போடறோம் ? ). திடீரென்று முட்டிக்கு மேலே ..... பிடித்த நாயகனின் தொடை திரையில் பெரிதாக தெரிவதை , அக்காலப் பெண்டிர் சற்றே படபடப்புடனே ரசித்திருப்பார்கள் என்று உணர முடிகிறது.இருந்தாலும் ...ஏனைய விஷயங்களில் புகழ் பெற்றிருந்தாலும் ...இது தொடை பற்றிய பதிவானதலால், இவரது தொடையும் சற்றே மெலிந்திருந்ததால் பெரிதாக பாராட்ட முடியவில்லை ! 'கொடை வள்ளல் ' என்று பெயெரெடுத்தவரை....தொடை வள்ளல் என்று அழைக்க முடியவில்லை ! இருந்தாலும் மாநிலம் பயனுற ஒரு நல்ல கலாச்சாரத்தை தொடங்கியதால் இவரே முன்னோடி ! ஆனால் இவர் காலத்திலேயே நம்ம நம்பியாருக்கு அற்புதமான தொடை வரப்ரசாதமாக அமைந்திருந்தது...தீவிர உடற்பயிற்சியும் உடையவர் என்பதால்...அவரது தொடை நன்கு விரிந்து பரந்து செழுமையாக இருக்கும்...இதை MGR அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சண்டை காட்சியில் காணலாம்.

சிவாஜி அவர்களின் நடை , உடை , பாவாடை...ஸாரி ... பாவனை எல்லாம் அட்டகாசமாக இருந்தாலும் .. இடுப்புக்கு மேல் தான் ...கீழே அவரது கால்கள் MGR கால்கள் போல சுமார் ரகம் தான் ...வித்தியாசம் ...கொஞ்சம் கலர் கம்மியாக இருக்கும் அவ்வளவு தான் !.அடுத்து நம்ம ஜெமினி கணேசன் சார் கூட ,கண்கள் உருட்டுவதிலும்...ஹஸ்க்கி வாய்ஸில் ....காதல் மொழிகள் ( ஷாந்த்தாஆ...).பேசி தான் ரசிகைகளை மகிழ்வித்தாரே தவிர தொடை காட்டுவதில் கவனம் செலுத்தவில்லை ... ஒரு வேளை திரைக்குப் பின்னால் காட்டியிருப்பாரோ ?

அடுத்த தலைமுறையாக ...ஜெய்சங்கர் அவர்கள் 'கௌ - பாயாகவே' காலத்தை ஓட்டி .. பேன்ட் அணிந்து துப்பாக்கி சுடுவதிலேயே ஆர்வம் காட்டினார்.அதுவுமில்லாமல் அவர் நடித்த Dr.கர்ணன் படங்களில் ஆண்கள் கவர்ச்சிக் காட்ட அனுமதியில்லை. ரவிச்சந்திரன்,முத்துராமன் போன்றோர் மிக பிரபலமாக இல்லாததால் ...தொடை காட்டி நடித்தாலும் ,அவர்களைப் போலவே ... அவர்கள் தொடையும் பெரிதாக பிரபலமாகவில்லை.திரையுலக மார்க்கண்டேயன் என்று செல்லமாக அழைக்கப்பட்டாலும் ...தீவிர யோகாசனங்களால் சிவகுமார் அவர்களின் தொடையும் இளைத்துப் போய் மதிப்பெண் இழக்கிறது.ஆக இந்த கால கட்டம் ....அல்லது கால வட்டம் ஒரு தொடை வறட்சி தலைமுறையாக போய் விட்டது !

நம்பியாரும் வில்லனாகவே இருந்து விட்டதால் ... தொடைப் பஞ்சத்தில் இருந்த முற்கால தமிழ் சினிமாவிற்கு... பிற்காலத்தில் நல்ல பல தொடையழகர்கள் கிடைத்தார்கள் !.முன்னோடி MGR போல் .... பின்னாளில் தொடைக்கோர் மறுமலர்ச்சி ஏற்பட்டது கமலஹாசனால் தான் ! 'வேட்டி மறைவு' தொடையாக காட்சி அளித்துக் கொண்டிருந்த பழைய நாயகர்களை தாண்டி...கட்டியிருந்த வேட்டியையே 'சட்டென' உருவி எறிந்து ... தேசிய உடையான கோவணத்துடன் ...'16 வயதினிலே' படத்தில் ரசிகைகளை திக்கு முக்காட வைத்தார் கமல்ஜி ! கலைக்காக ...அதையும் உருவி எறியவும் கமல் தயாராக இருந்திருப்பார் ... வெளிப்புற படப்பிடிப்பு என்பதால் பாரதிராஜா அவர்கள் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.சதைப் பற்று அதிகம் இல்லை என்றாலும் கதைப் பற்று இருந்து ... முக்கால் நிர்வாணமாகியதால் அவருக்கு தொடையழகன் பட்டம் 'கட் ஆப்' மதிப்பெண்ணில் கிடைத்து விட்டது ! தொடைக்கோர் கீதமாக இவரது 'பொன் மேனி ..' பாடல் விளங்குகிறது .இதையே முன்மாதிரியாக வைத்து ராமராஜன் 'டவுசர் பாண்டியாக' களம் இறங்கி ... எ .ஊ .பா .படமும் 'ஹிட்' ஆகியது ... ஆனால் பிற்பாடு அவர் ட்ரவுசர் போடாமல் நடித்ததால் ....தப்பா நினைச்சுடாதீங்க மக்களே ...வேஷ்டி, பேண்ட்டெல்லாம் போட்டிருந்ததார் ....தொடை வறட்சி ஏற்பட்டு ...பிறகு சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை !

தொடை பஞ்சத்தில் இருந்த தமிழ் சினிமாவை மீட்க ஒரே காலகட்டத்தை சேர்ந்த ...உடற்பயிற்சி பயின்ற பிரபு,விஜயகாந்த்,சத்யராஜ் என்கிற பெரும் படை தொடையில் ...ஸாரி ...திரையில் களமிறங்கியது ! பிரபு ,சின்ன தம்பி போன்ற கிராமிய படங்களில் ...இலை மறை காய் மறையாக தொடை காட்டி நடித்து அவ்வகை படங்கள் வெற்றியும் பெற்றன ! விஜயகாந்த் ..தொடை என்று முக்கியத்துவம் கொடுக்காமல் ஒட்டுமொத்த காலுக்கும் சேர்த்துக் கொடுத்து... சண்டை காட்சிகளில் புகழடைந்தார்.இங்கு சத்யராஜை பற்றி அவசியம் சொல்லவேண்டும்...பெண்களுக்கு இணையாக...தண்ணீரில் மூழ்கிக் கொண்டு...ஈரத்தில் ஒட்டிய வேஷ்டி . அன்டர்வேர் ...என்று சளைக்காமல் கவர்ச்சிக் காட்டினார் ! அதிலும் கடலோரக் கவிதைகள் படத்தில் போதும்...போதும் என்று அலுக்க ...அலுக்க 'ஸீன்' காட்டி படத்தின் வெற்றிக்கு பாடுபட்டார் ! இதுவும் பாரதிராஜா படம் ... ஆக நாயகர்களின் கவர்ச்சி காட்டுதலுக்கு இவரின் பங்கு தமிழ்த்திரைக்கு இன்றியமையாதது ! இவரின் பு.நெ.பு.நா.(கெட்ட வார்த்தை இல்லை) படத்தில், நாயகி...நாயகனின் தொடையை தன் விரல்கள் மூலம் மயிலிறகால் வருடுவது போல் ஸ்பரிசித்து விட்டு ..."கருத்த மச்சான்..", என்று பாடி படம் தூள் கிளப்பியது !

இதே சமயங்களில்...தன் உடல் ஆகிருதி மூலம் திரையில் புகழடைந்து இருந்த சரத்குமார் கூட தொடையழகில் வெல்ல முடியவில்லை...ஏனென்றால் அதில் வெற்றி பெற உடற்பயிற்சி இருந்தால் மட்டும் போதாது ...சற்றே தொள ....தொளவென்று ஊளை சதையும் இருக்க வேண்டும்.சரத்துக்கு ...அவரது உடல் போல் இல்லாமல் தொடை சதை கொஞ்சம் கம்மி தான்.

தமிழ் திரையுலகின் நாயகர்கள் ஒரு சிறந்த 'தொடைராஜா' வாக ஆவதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது ! வெறும் உடற்பயிற்சி இருந்தால்... அது சதைப் பற்று சற்று கம்மியாக... 'ஆடா தொடையாக ' இருக்கும் ! அதனால் குத்தாட்டம் போடும் போதும் .... சண்டையில் உதைக்கும் போதும் ...சதையாட்டம் இருக்காது ! நாயகிகளே டக ...டக வென்று ...மார்ப்புக் கச்சையும் ....ஏன் சில சமயம் மார்ப்பே பிய்ந்து விடுவது போல் குலுக்கி மற்றும் ஆ(ட்)டிக் 'கொல்வார்கள் '.... அப்படியிருக்க நாயகன் என்றால் சும்மாவா...சும்மா ரெண்டு ஊருக்கு போயிட்டு வருவது போல் சதை ஆட வேண்டும் அல்லவா... ?

இனி தான் தான் திரையுலகில் ஒரு 'தொடை புரட்சி' செய்த ..... ஒரு தலையாய நாயகனை பார்க்கப் போகிறோம்...அவர் வேறு யாருமல்ல...தனது ஒவ்வொரு படத்திலும் ...நம்பி வரும் ரசிகைகளை ஏமாற்றாமல் 'தொடைக்காட்சி' அளித்து ...தொடர்ந்து வெற்றி படங்களை ...கொடுத்த...கருத்த ...பெருத்த...பருத்த தொடையழகர் ராஜ்கிரண் தான் ! எ.ரா.ம. இல் ஆரம்பித்தது இவரது தொடை தரிசனம் !! ...படமும் ஹிட் ஆனதால்...கவர்ச்சி ஆட்டம்,குத்து நடனம் போல் ...இவரது தொடை காட்சிகளும் ...விநியோகஸ்தர்களால் வேண்டப்பட்டன ! பருத்த தொடையுடன் ...அன்டர்வேர் பாதுகாப்புடன் ..இவர் எம்பி..எம்பி அடிப்பதில் ....பல பெண்கள் பரவசமானார்கள் என்பது நிதர்சனம் ! வெட்டிப் போட்டால் ரெண்டு ஊரு சாப்பிடும் அளவு கறி இருப்பது போல ..'ஒக்க பிரம்மாண்ட ஸ்டரக்டரலு' ! சலிக்க ....சலிக்க காட்டி..பின் கொஞ்ச கொஞ்சமாக தொடை மறைத்து...பின் அவரும் திரையில் மறைந்து விட்டார்.
ஆக தமிழ் திரையுலகத்தின் மத்திய காலம் தான் தொடைராஜாக் களின் பொற்காலம் என்று சொல்லலாம்.

இன்றைய காலக் கட்டத்தில்.... பிரசாந்த் ,தொடை காட்டி நடித்திருந்தாலும் ..of course அது பெரிதாக இருந்தாலும் கூட...பழைய குலுக்கல் நடிகை ஜெயமாலினிக்கு போட்டியாகத்த் தான் அது 'பாலீஷாக' இருந்தது ! ஒரு வேளை 'அவனுங்களுக்கு ' பிடித்திருக்கும் போல ! விக்ரம்,சூர்யா என்று 'ஆறு பட்டை வயிறு ' (6 pack ) உள்ள நாயகர்களுக்கு கூடதொடையை பார்த்தால் .... சிறிய வகை பிராய்லர் கோழிக்குஞ்சு தொடையாகத் தான் தெரிகிறது ! விஜய் கூட இந்த தொடை விஷயத்தில் வீக் தான்...'கா.ம' படத்தில் நீச்சல் குளத்தில் இருந்து அவர் 'ஷார்ட்சுடன்' வெளி வந்து ஒரு நடை நடந்து வருவார் பாருங்கள்...பள்ளிகூட பசங்க தொடை போல செம காமெடியா இருக்கும் ! இந்த லட்சணத்துல இவர் அஜித் தொப்பையை கிண்டல் பண்ணி "குண்டு மாங்கா "பாடலுக்கு ஆடினார்... அவ்வளவு தான் 'அஜித் கார்ப்பரேஷன்' ஆட்கள் பலவாறாக R & D பண்ணி தளபதியிடம் இல்லாத சரக்கு ... 'தல'யிடம் என்ன இருக்கிறது?.., என்று தேடிக் கண்டு பிடித்தார்கள் ...அது தான் தொடை ! "சாலா..." பாட்டில் 'தொடை பறக்க' ஆடி ...சும்மா...பின்னு பின்னென்று பின்னி...விஜய்க்கு சொல்லாமல் சொல்லி, பதிலடி கொடுத்திருப்பார் ! ரசிகைகள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் பித்து பிடித்து போனார்கள்...பாட்டைப் பார்த்து ! ஒரு 'தல' ரசிக நண்பனே சொனனான் ...இதுக்கே காசு சரியாயிடுச்சு என்று...திரைப்படம் பார்த்து அல்ல ...'ப்ரீமியர் ஸ்டில்சை' பார்த்தே ..! அந்த பாடலில் அஜித் ..வேஷ்டியை விலக்கி சரேலென்று தொடையை தூக்கி காட்டும்போது...அந்த தொடையில் MGR ம் ...ராஜ்கிரணும் ஒரு சேர (கலர்+கவர்ச்சி) தெரிந்தார்கள் ! ஆக தமிழுக்கு ஒரு 'தல'யாய தொடையழகர் கிடைத்து விட்டார் ! அதன் பிறகு தான் விஜய் ...தொடை காட்டி ரிஸ்க் எடுக்காமல் ஒதுங்கி விட்டார்....முன் காலங்களில் கமலைப் பார்த்து ரஜினிகாந்த் தொடைப் போட்டியிலிருந்து விலகியது போல் !

இது இப்படி இருக்க ... தமிழ் கதாநாயகர்களுக்குத் தான் எத்தனை எத்தனை தகுதிகள் இருக்க வேண்டும் பாருங்கள்...அவன் ஓவியன், பாடகன் என்று எந்த தொழில் செய்தாலும் ..திறமையாக சண்டையிட வேண்டும்,காதலிக்க வேண்டும்..தாய்ப்பாசம் காட்ட வேண்டும்,நடனம் ஆட வேண்டும் ..ஸ்ஸ்ப்பா...!!! அது போல் ,,,இருக்குதோ இல்லையோ...தொடை வேறு காட்ட வேண்டும் ! ஆனால், இயக்குனராக இருந்தாலும் ..சசிகுமாருக்கு இது தெரியாதா என்ன.?..அவரைப் போன்ற நடிக இயக்குனரான SJ சூர்யா ..தனது 'சோமாலிய தொடையையே' வேஷ்டி விலக்கி ...தன்னம்பிக்கையுடன் காட்டி ஆடியிருப்பார் ..'மயிலிறகே' பாடலுக்கு ! இவரோட இரண்டு காலையும் சேர்த்து வைத்தால் கூட நம்ம ராஜ்கிரனோட ஒரு தொடைக்கு ஈடாகாது ! அப்படியிருக்க....தான் 'குட்டித்தொடை' என்றாலும்....காட்டுவதில் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை என கோதாவில் குதித்து விட்டார் சசி !
அஜீத்துக்குப் பிறகு ...எதிர்காலத்திற்கு...செழித்த வளமான தொடையுடன் ... ஜெயம் ரவி மட்டும் தான் நமக்கு ஒரு நம்பிக்கை 'தொடைச்சித்திரமாக' தெரிகிறார் ! வாழ்க தொடை....வளர்க அவர் சதை !

இந்த' தொடையேழு வள்ளல்களை' தமிழ்த்திரையுலகம் என்றும் நினைவில் கொள்ளும் !
'தொடைப்புராண' பதிவு முடிந்தது !

பி.கு : இங்கு தொடை என்பதை உருவகமாகக் கூடக் கொள்ளலாம் .

சிறுவர் கதை @ 18+



சிறுவர் கதை தான் இருந்தாலும் .... வயது வந்தவர்க்கு மட்டும் !


வீட்டிலிருந்து பள்ளிக்கு போகும் வழியிலேயே ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது.செல்லும் வழியில் உள்ள வீடுகளின் தோட்டங்களில் நந்தியாவட்டை,செம்பருத்தி,தும்பை போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் .அவையெல்லாம் "பறிச்சிக்கோ ...பறிச்சிக்கோ", என்று கூவுவது போல் இருக்கும் ! நானும் அதற்கு செவி சாய்த்து நண்பர்களுடன் சேர்ந்து பறித்துக் கொண்டு செல்வோம் . பறித்த பூக்களை என்ன செய்வது? ...நேராக கோவிலில் உள்ள பலிபீடம் அருகே வைத்து விடுவோம்.இது தினப்படி நடைபெறும் ஒரு சமாச்சாரம் ! பெரிய பக்த சிரோன்மணிகள் எல்லாம் கிடையாது....சும்மா ஏதாவது பரபரப்பா செய்ய வேண்டும் ...அவ்வளவு தான் !

ஆனால் பரீட்சை நேரங்களில் மட்டும் ...பக்தி ரசம் பிய்த்துக் கொண்டு ஆறாக ஓடும் ! ஏனைய சமயங்களில் பறித்த பூக்களை மொத்தமாய் ஓரிடத்தில் போட்டு விட்டு செல்லும் நாங்கள்.... தேர்வு நேரங்களில் மட்டும்....அந்த கோவிலில் உள்ள ஒவ்வொரு தெய்வமாக தேடிச் சென்று பூக்கள் வைத்து விட்டு வருவோம்.துவாரபாலகர்கள் மற்றும் பாலகிகளே அன்று பூக்களால் ஜொலிப்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ! பின்னே...ஒரு சாமிக்கு விட்டு விட்டால் கூட ...மார்க் குறைந்து விட்டால் ?! இது போன்ற சமயங்களில் ...பூ வேட்டைக்காக ... உயரத்தில் இருக்கும் பூக்களையும் பறித்தால் தான் போதுமானதாக இருக்கும்.ஆகவே...வீடுகளின் ஓரமாக இருக்கும் மதிலின் மேல் ஏறி ...நடந்து சென்று...எக்கி ...எம்பி குதித்து ...'உயிர் பணயம்' வைத்து பறிப்போம் ! வீட்டுக்காரர்கள் பார்த்து விட்டு கத்தும் போது ... சாகஸ வீரர்களாக குதித்து தப்பி ஓடுவோம் ! ஏனைய சிறுவர்களை விட எங்கள் குழு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில் உள்ளூர கர்வமும் உண்டு ! ஆனால் பின்னாளில் மார்க் ட்வைனின் , 'டாம்சாயர் ..'ஹக்கிள் பெர்ரி பின் ' போன்ற உலக காவியங்களை படிக்கும் போது ...எங்கள் சாகஸமெல்லாம் ஒன்றுமில்லை என்று தோன்றியது !

அந்த வயதுகளில் எப்போதும் மனதில் நிறைய கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கும்....கேள்விகளின் நாயகனாக இருப்பதால்....பெற்றோர் முதற்கொண்டு உறவினர், ஏனையோர் யாவரும் என்னைக் கண்டாலே... 'விளக்கினில் கை வைத்த பிள்ளை வெடுக்கென இழுத்தது போல்' ஓடி விடுவர் ! இருப்பினும் ...ஒரு கட்டுபெட்டியான 'கான்வென்ட்டில் ' இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே...காமன் அருளால் ...நண்பன் 'நட்டு' மூலம் .. 'குழந்தை பிறக்க என்னென்ன உழைக்கணும் ....எங்கெங்க விடனும் ' ... போன்ற 'ஒலக' உண்மைகளை தெரிந்துக் கொண்டேன் ! (அந்த சம்பவத்தை பற்றிய எனது பழைய பதிவிற்கான சுட்டிhttps://www.facebook.com/kaattaan/posts/275993059167708...படித்து இன்புறுக ! ) முக்கிய விஷயத்தை தெரிந்துக் கொண்டாலும் ...பள்ளி மாறி விட்டதால் .. மேலும் பல கிளை விஷயங்களை தெரிந்துக் கொள்ள முடியாமற் போய் விட்டது ! ஆனால் படித்த 'கான்வென்ட்டை' விட அடுத்து சேர்ந்த அரசு பள்ளியில் ... நல்லதொரு சுதந்திர சூழ்நிலைகள் , நண்பர்கள் அமைந்தனர்....ஏனைய கேள்விகளுக்கும் விடை தெரிய !

கிளை விஷயங்களான.... 'வயதுக்கு வருதல், குழந்தை பிறக்காமல் இருக்க கர்ப்பத்தடை '...போன்ற விஷயங்கள் மட்டும் சற்று குழப்பமாகவே இருந்து வந்தது . வயதான பெண்கள் குழாம் ஒன்று பக்கத்து வீட்டு அக்காவை ," அவ பெருசாயிட்டா , வயசுக்கு வந்துட்டா ..",என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது .சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று நேரடியாக ...அந்த அக்காவிடமே போய் ..."அக்கா ..நீங்க பெருசாயிட்டீங்க . .அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க...ஆனா நீங்க பெருசாகாம...அப்படியே தான் இருக்கீங்க... வயசுக்கு வந்துட்டீங்கன்னும் சொல்றாங்க ...அப்படின்னா என்ன?, என்றேன் ! பூமா அக்காவின் முகத்தில் ... கோபம்,வெட்கம்,எரிச்சல் ...என்று நவரசங்களும் வந்தன.."ப்..ச்ச்... போடா...என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் ! நான் எப்போதும் போல் விடாக்கொண்டனாக " ராட்சஸி மாதிரி திடீர்னு ஒருநாள் நீ வளர்ந்து பெருசாகி...."பூமா பெரியவளாயிட்டா",அப்படின்னு அசரீரி குரல் ஒலிக்குமா ..? ", என்றெல்லாம் 'அம்புலிமாமா ' பாதிப்பில் நான் கேட்டதும் பூமா அக்கா செம கடுப்பாகி அடிக்க வர ..நான் 'எஸ்கேப்' ! இருந்தாலும்...லைப்ரரி மற்றும் கடைகளில் ....' பெருசாயிட்டாள் ...வயதுக்கு வயசுக்கு வந்துட்டாள் ' பற்றிய புத்தகங்களை தேடினேன்...தேடினேன்....நூலக ஓரம் வரை தேடினேன் ...அப்புறம் கிடைக்காமல் நின்று விட்டேன் ! சரியான தலைப்புடன் தேடவில்லை என்று ..சில...பல...களப் பணிகளுக்குப் பின் புரிந்துக் கொண்டேன் ... சரியான வார்த்தை 'மாத விலக்கு' என்று ! கேள்வி ஞானத்துடன் சுற்றிய ஒரு பாலகனை ...பேச்சு தமிழ் ,உரைநடை என்று இரண்டாக பிரிந்து வைத்து குழப்பி இருக்கிறது இந்த சமூகம் !...குறிப்பிட்ட புத்தகத்தை படித்து சகலமும் தெரிந்துக் கொண்டேன். இருந்தாலும், கர்ப்பத்தடை விஷயம் என்பது மட்டும் .... சில அறுவை சிகிச்சை முறைகள் , மருந்துகள் மற்றும் சாதனங்கள் என்று பொதுவாக படிக்க முடிந்ததே தவிர விலாவாரியாக தெரிந்துக் கொள்ள முடியவில்லை !

இந்த சமயத்தில் தான் ...நிரோத் - கருத்தடை சாதனம் என்று பார்க்குமிடமெல்லாம் ...நிரோத் விளம்பர புராணமாகவே இருந்தது ! கையகல மஞ்சள் கவரில் ஒரு சிகப்பு முக்கோணம் போட்டு ...அதில் ஒரு ஆணும் பெண்ணும் மூக்கோடு மூக்கு வைத்து சிரித்துக் கொண்டிருப்பார்கள் ...'க்ளோஸப்பில்' ! ஆணும் பெண்ணும் மூக்கோடு மூக்கு வைத்து இருக்கும் அந்த 'போஸ்' கலவி சாஸ்திரத்தில் மிக முக்கியமான ஒன்று ...பொருத்தமாக அதை 'டிசைன்' செய்த நபரை நினைத்தால் இப்போது ஆச்சரியமாயிருக்கிறது ! கேபிள் டிவி வந்த புதிதில் ..சன் டிவி மட்டும் தான் பிரதானமாக இருந்து வந்தது...அதன் தாக்கத்தில் ...கேபிள் டிவி 'கனெக்சன்' என்றாலே...இன்றும் சன் டிவி கனெக்சன் என்று தான் பலரால் அழைக்கப்படுகிறது ! அதே போல் 'காண்டம்' (சுந்தர காண்டம் அல்ல) என்பதே நிரோத் என்று தான் இன்றும் அழைக்கப்படுகிறது !
"உள்ளே அது எப்படி இருக்கும்?", என்கிற ஆவலில்....கடைக்காரர்களிடம் விசாரித்தும்...சில சமயம் காசு கொடுத்து கேட்டும் பார்த்தேன் ! "மொளச்சு மூணு இலை விடலே, அதுக்குள்ளேயா ... ஓடறா .... ", என்று என் கேள்வி அறிவை விரட்டியடிக்கும் சம்பவங்கள் தான் நடந்தன !

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாள் முட்டை வாங்குவதற்காக கடைக்கு சென்று...கடைக்காரர் கட்டி கொடுக்கும் வரை நின்றுக் கொண்டிருந்தேன் ! அனிச்சையாக எனக்கு முன்னே வைத்திருந்த ஒரு பெட்டியில் கையை வைத்துக் கொண்டு....சாவதானமாக உள்ளே இருந்த தூளை ...நினைவில்லாமல் எடுத்து வாயில் வைத்து மென்று தின்று விட்டேன் பாக்கு மாதிரி இருந்தது ! சட்டென்று நினைவிற்கு வந்து ...தூள் இருந்த பெட்டியை தூக்கி பார்த்தேன் ..தூக்கி வாரிப் போட்டது ! அது மொத்தமாக நிரோத் கவர்களை வைத்திருக்கும் பெட்டி...ஐய்யய்யோ ..அந்த கருத்தடை மருந்தை சாப்பிட்டு விட்டேனா...என்ன ஆகப் போகுதோ....எனக்கு குழந்தை பிறக்காமல் போய் விடுமோ...வீட்ல சொன்னா..இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு ...உதை விழுமே ...நாமே டாக்டர்கிட்டே போகலாமா...", என்றெல்லாம் பலவாறு யோசித்து....இருண்ட முகத்துடன் ..குழப்பத்துடன் வீட்டையடைந்தேன்.அப்பா அம்மாவை பார்க்கவே மனசுக்கு கஷ்டமாக இருந்தது ... அவர்களுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் ...நினைக்க நினைக்க அழுகையே வந்தது ! பின் ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு....ஆனால் ஒரு குழப்பத்துடனேயே இருந்து வந்தேன் .

பக்கத்து ஊரிலிருந்து புதிதாக ஒரு மாணவன் எங்கள் குழுவில் சேர்ந்துக் கொண்டு நண்பனானான்.அவன் பேருந்து நிலையத்திலிருந்து வரும் வரை காத்திருந்து ...எங்கள் பள்ளி செல்லும் படலம் தொடரும்.காத்திருத்தலுக்கு ஒரு விசேஷ காரணமிருந்தது..தேன் மிட்டாய் , கடலை மிட்டாய் போன்றவற்றை ஒன்றோ இரண்டோ தான் வாங்கி சாப்பிட முடியும் ... ஆனால் புதிதாக வந்த நண்பனோ ...அவைகளை பாக்கெட்..பாக்கெட்டாக கொண்டு வந்து ...எங்களுக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்வான்."எதுடா...இத்தனைக்கும் காசு ?", என்று கேட்டதும் தான் அவன் பெற்றோர்கள் வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவது தெரிந்தது ! எனக்கு குபீரென்று ஆர்வம் கிளர்ந்து...நிரோத் பற்றிக் கேட்டேன்."...ப்பூ அதுக்கென்னடா ...எத்தனை பாக்கெட் வேண்டும்?" ,என்றான் பந்தாவாக ! "அவ்வளவெல்லாம் வேண்டாம் எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் எடுத்து வாடா ",என்றேன்.கண்டிப்பாக நாளை எடுத்து வருவதாக சொல்லி விட்டு...பேருந்துக்கு நேரமாகி விட்டதால் வேகமாக விடைபெற்று கொண்டான் ! சொல்லொன்னா மகிழ்ச்சியுடன் வீட்டையடைந்தேன்.இருப்பினும் ஒரு குழப்பமும் இருந்தது...ஒரு வேளை பிரித்ததும் ...நான் சாப்பிட்ட பாக்கு தூள் போன்ற 'கருத்தடை வஸ்துவாகவே' இருந்து விட்டால்.?..உண்மையிலேயே அன்று இரவு முழுதும் ஒரு கதம்பமான மனநிலையிலேயே தூங்கி விட்டேன்.

மறுநாள் விடியல் எனக்காகவே விடிந்தது போல் இருந்தது...."நண்பன் வருவானா ...? மறக்காமல் கொண்டு வருவானா?", என்றெல்லாம் பதை பதைப்புடன் காத்திருந்தேன் ....ஆனால் அவன் வந்ததும் என்னைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகை பூத்ததிலேயே கொண்டு வந்திருப்பது உறுதியாயிற்று ! அடுத்து...அதை நிதானமாக பிரித்து பார்க்க ஒரு இடத்தை யோசித்தோம் ... உடனே பார்க்க தோதாக...பள்ளி செல்லும் வழியில் உள்ள...பூக்கள் வைக்கும் கோவிலின் உள்ளே .... வலம் வரும் போது தென்படும் ஒரு பாழும் மண்டபம் என்று முடிவாயிற்று.கோவிலில் இந்த தவறை செய்வதற்கு பிராயச்சித்தமாக 'எக்ஸ்ட்ரா' பூக்கள் சாமிக்கு வைத்து விடலாம் என்றும் சபையில் முடிவாயிற்று ! மேற்கூறிய இடத்தை அடைந்து ...நண்பனிடமிருந்து நானே வாங்கி பிரிக்க ஆரம்பித்தேன்...பிரிக்கும் போதே தூள் போல் எதுவும் நெருடாதலால் ... குதூகலத்துடன் பிரித்து முடித்தேன்.
:
"டேய்...என்னடா...இது பலூன் மாதிரி இருக்கு....கடையில ஏதாவது மாற்றிக் கொண்டு வந்துட்டியா...?"

"இல்லடா...நிரோத் இப்படித்தான் இருக்கும் ...இங்கே பார்....இப்படி மாட்டிக்கணும் ", என்று சொல்லி ...இல்லாத குறியை...இருப்பது போல் அபிநயித்து ஒரு மினி ' டெமோ '
காட்டினான் ,கொண்டு வந்த நண்பன் !

நான் ஆச்சரியத்துடன்,..."இவ்ளோ நீட்டமா இருக்கே...எப்படிடா ஒவ்வொருத்தங்களுக்கும் இது பொருந்தும் ?", என்று கேட்க ,,, நண்பன் சலிப்புடன் "ஏய் ...மாட்டிக்கிட்டதும் தேவையான அளவு வச்சுகிட்டு ...மிச்சத்தை சுருட்டிக்க வேண்டியது தான் !", என்று சொல்லும் போது நாங்கள் ஆறாப்பு படித்துக் கொண்டிருந்தோம்.

பாலர் கதை முற்றிற்று !

கடவுள் இருக்கிறாரா...?



கடவுள் இருக்கிறாரா...?

இல்லையா...?

நாம் கூடும் போது

இருப்பவர் ....

பிரியும் போது

இருப்பதில்லையே !

இருத்தலால் ...இருப்பவரென்றில்லை !

இல்லாதிருப்பதால் .... இறந்தவர் என்றுமில்லை !

-

இப்படிக்கு

இறந்தவன்

துயில் ஆசை



இரவு தோறும்

பிறந்த நிலையிலேயே

'துயிலவும்' வேண்டும்

என்று பேரவா !

ஆனால் ....

இன்னொரு பிறப்பு

ஏற்பட்டு விடுமோ ...

என்று தான்

அச்சமாக இருக்கிறது !

சில மணி துளிகளுக்கு முன்பு எனது நண்பர்கள் ... ஒரு பிளாக் கவிஞரை ....ராட்டி ...ராட்டி ....பாராட்டிக் கொண்டிருந்த நிகழ்வைப் பார்த்து , என்னையும் ஒரு கவிதை படைக்க வைத்து விட்டது ...விதி வலியது !

பி.கு: உறை போடலாமே என்று கேட்கும் அறிவு சார் நண்பர்கட்கு ......

உடலுக்கே உடை வேண்டாம்

என்றெண்ணும் போது

உறுப்புக்கு மட்டும் எதற்கு ?

நீரால் கெடும் !



தண்ணீர் 'பாக்கெட்' முதல் முதலில்..... சென்னையில் ஒரு இளைஞரின் சிந்தனையால் உருவாக்கப்பட்டது ! அதற்கு முன்பு வரை 'பாண்டிச்சேரி' மற்றும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பார்கள் ! தூய்மை என்கிற விஷயத்தை தாண்டி , ஒரு status symbol ஆகத்தான் அப்போது விளங்கியது ! பயணங்களின் போது ... ஒரு கையில் 'பாட்டிலை' பெருமை பொங்க ஏந்திக் கொண்டிருப்பார்கள் கனவான்கள், சீமாட்டிகள் !

இதற்கு 'ஆப்பு' வைப்பது போல் .... ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக 'வாட்டர் பாக்கெட் ' வந்ததும் ஒரு மாபெரும் புரட்சியே ஏற்பட்டது ! மக்களிடம் சோம்பேறித்தனம் மிக வேகமாக பரவிக் கொண்டிருந்த நேரம் .... சட்டென்று இது பற்றிக்கொண்டது ! பழைய பாட்டிலில் நிரப்பிக் கொண்டு எடுத்து போகவும் சோம்பல்...போகும் இடத்தில் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கவும் தயக்கம் .... இந்த சூழ்நிலையில் சல்லிசான விலையில் போகுமிடங்களில் எல்லாம் எளிதாக கிடைக்கும் இந்த 'பாக்கெட் மேட்டர் ' நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கியது !

உண்மையில் ...'தூய நீர்' என்கிற விஷயத்தை விட....உபயோகிக்க வசதியாக இருக்கிறது என்பதில் தான் இதன் வியாபாரமே இங்கு இருப்பதாக உணர்கிறேன் !

பற்களால் கடித்து ... சிறிய ஓட்டையை போட்டு பெரும்பான்மையோர் உறிஞ்சும் அழகை பார்க்கும் போது.... பட்டினத்தாரின் "கறந்த இடத்தை நாடுதே ...." வரிகள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை....இதில் அனைத்து வயதினரும் ...பாலினரும் அடக்கம் ! இது தவிர 'மிக்ஸிங்க்கு' வேறு மிக அற்புதமாக துணை புரிவதால் ... இதன் கணிசமான வளர்ச்சிக்கு 'டாஸ்மாக்குக்கு' பெரும் பங்கு உண்டு !

ஆரம்பித்த சில நாட்களிலேயே 'தண்ணீர் பை' வியாபாரம் பிய்த்துக் கொண்டு செல்வதை பார்த்து அரண்டு போன 'தண்ணீர் புட்டி ' நிறுவனங்கள் .... அந்த இளைஞர் மேல் வழக்கு தொடுத்தது ! புட்டி நிறுவனங்கள், mineral water என்று விற்பனை செய்து வந்தன .... பாக்கெட் தண்ணீரில் 'மினரல்' இல்லை என்று வாதிட்டன ! "தண்ணீர் என்றாலே மினரல் கலந்தது தான்...ஆகையால் அனைத்துமே mineral water தான்", என்றெல்லாம் எதிர் வாதமிட்டு ... வெற்றிகரமாக வழக்கிலிருந்து வெளி வந்தது வாட்டர் பாக்கெட் நிறுவனம் !ஆனால் அதன் பிறகு ... packaged drinking water என்று போட்டு தான் ... உஷாராக பல 'பாக்கெட்' நிறுவனங்கள் விற்கிறது ! இப்போது என்னடாவென்றால் ... பாட்டிலிலேயே 'packaged drinking water ' என்று தான் போட்டு விற்கிறார்கள் .... Minerals காணவில்லை ! இப்படிப்பட்ட தண்ணீருக்கு அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறோம் ! பாதுகாக்கப்பட்ட குடி நீர் என்று விற்பதற்கும் .... வெறுமனே ... நிரப்பப்பட்ட குடி நீர் என்று எழுதி விற்பதற்கும் வித்தியாசமிருக்கிறதல்லவா ?

1 ரூ. என்று நமக்கு விற்கும் போதே ... 0.25 பைசா முதல் நாற்பது பைசா வரை தான் கடைகளுக்கு நிறுவனங்கள் விற்கும் ! இப்போதும் அடக்க விலை 1 ரூ.க்கு கீழே தான் என்றாலும் 2ரூ. , 3 ரூ. போய் ... நேற்று சென்னையில் .... பெரும்பான்மையான தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களின் சேவை நிறுத்தத்தால் ரூ.7 வரை விற்றிருக்கிறார்கள் இந்த so called drinking water ஐ !

"தில்லை நீரால் கெடும் " என்று ராமலிங்க அடிகளார் கூறினார்....தில்லை மட்டும் அல்ல ... நாடே 'பீரால்' கெடுவதை விட நீராலே தான் மிக கெடும் போல !

சிகைப் புராணம் அல்லது மயிர் பதிவு



தீவிர மனக்கிலேசம் ஏற்படும் போதெல்லாம் மொட்டை அடித்து ...கடலில் மூழ்கினால் எனக்கு மலர்ச்சி கிடைப்பது போல் ...(ஒரு முறை அலகு கூட குத்திக் கொண்டேன் ) தீவிர காய்ச்சல் , சளி, ஜலதோஷம் போன்ற உடல் உபாதைகள் தோன்றினால்....வேறொரு உபாயம் செய்வேன் ! அது... சிகையை மழுங்க சிரைப்பது .... எப்படி என்றால் ' மொட்டை அடித்த பின் சில நாட்கள் ' அளவு .... அரும்பு மீசை போல , அரும்பு தலை மயிர் ! இந்த அளவு முடியை heavy summer cut போட்டு விட்டு ..... வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு ..... அப்படியே கடற்கரையோர சாலையில் ..... எனது ஒற்றை கொம்பனில் (Unicorn - Honda )சென்றால் போதும்..... அனைத்து உபாதைகளும் காத தூரம் ஓடி விடும் ! பின் , நாட்டுக் கோழியோ .... பிராய்லரோ ... நிறைய மிளகு போட்டு..... நீர்க்க குழம்பு செய்து ,அதில் புழுங்கல் சாதம் சூடாகப் பிசைந்து வாயில் போட்டு.....அவ்வப்போது வெந்நீர், மிளகு கலந்த 'ஓல்ட் மங்க்' சில மிடறுகள் ! மேற்கூறிய' இயற்கை வைத்திய ' முறைகளினால் நான் பல வருடங்களாக குணமாகி வருவதால்,எனது மருத்துவ.... நண்ப மற்றும் உறவினர்கள் செம 'காண்டில் ' இருக்கிறார்கள் ! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்", என்கிற சீரிய கோட்பாடினால்... நான் எனது பல உறவின,நண்ப
மக்கட்க்கும் இதைக் களப் புரிதலோடு உணர்த்துவதால் தான் என் மருத்துவ உறவினர்களுக்கும் , Dr.நண்பர்களுக்கும் அதிக கோபம் !

இயற்கையிலேயே நமது உடலில் எல்லா எதிர்ப்பு சக்திகளும் நிரம்பியுள்ளது ..... ஆனால் திருட்டு நடக்காத' VIP ஏரியா அபார்ட்மெண்ட்' காவலாளி போல வேலையில்லாமல்....இல்ல வேலை கொடுக்காமல் அந்த சக்திகள் தூங்கி விடுகின்றன ! சின்ன தலைவலியோ , தும்மலோ வந்தாலே...உடனே அந்நியன் போல மருத்துவர் அவதாரம் எடுத்து விடுகின்றனர் நம் மக்கள் ! செட்டு மாத்திரையில் தொடங்கி .... ப்ளட்டு மாத்திரை வரை , குடிசை முதல் மாட மாளிகை ...ஸாரி ...அபார்ட்மெண்ட் வரை இக்கலாச்சாரம் பரவியுள்ளது ! அறுவை சிகிச்சைக்கு மட்டும் தான் அலோபதி , மற்ற விஷயங்களுக்கு "ச்சலோ பதி !"

இந்த சிகை மழி கலைஞர்களுக்கு .... அதாங்க நம்ம Beauticians ?! ....இவங்களுக்கு , அவங்க சொத்தையே இழப்பது போல் .... நம்ம 'சிகை இழப்புக்கு' ரீயாக்ட் கொடுப்பாங்க பார்த்துருக்கீங்களா...? நாமே ஜுரத்தில் கஷ்டப்பட்டுகிட்டு வந்து,...."சுத்தமா குறைச்சிடுங்க அண்ணே ..." , அப்படின்னு சொன்னா கூட .."சரி...சரின்னு", சொல்லிட்டு ....சும்மா மேலாப்ல வெட்டிடுடறது ...."என்னண்ணே ??", அப்படின்னு கேட்டதும் ...கொஞ்சமா வெட்டறது....அப்புறம் கொஞ்சம்...! கடைசியா " போதுண்டாம்ப்பா ", அப்படின்னு நாமளே சொல்லிட்டு வந்துற வேண்டியது தான் ! ஏண்டா இப்படி பண்றாங்கன்னு பாத்தா ...இது வியாபார நுணுக்கமாம் !? அடிக்கடி 'கஷ்டம(சு)ருங்க' வரணும்னு இப்படி பண்ணுறாங்களாம் !? அட பாவிகளா ...2 மடங்கு சேர்த்து கூட பணம் கொடுக்க தயாராயிருக்கோம் , "சொல்ற லெவலுக்கு வெட்டுங்கண்ணே", என்று பிற்பாடு சொல்ல ஆரம்பித்தேன் ! அவரும் மனசுக்குள் புலம்பியபடி ,வெளியில் இன்முகத்துடன் செய்து முடிப்பார் ! சில சமயம் கோவிலுக்கு முடி காணிக்கை கொடுத்த பிறகு , ட்ரிம்மிங் செய்யச் செல்லும் போது அதிர்ச்சியில் , அவர் கண்ணு முழிகள் பிதுங்கி வெளி வந்து விடும் ! (3 மாசம் பிசினசு கோவிந்தா ! )

நிறைய முடி அடையும் போது , அதன் வேர்க்கால்களில் அழுக்குகள் படிய ஆரம்பிக்கும்.அப்படி படிய ஆரம்பிப்பதால் ..... மண்டையில் வியர்க்கும் நீரானது ,காயாமல் அதனூடே தங்கி ஈரப்பதத்தில் .... ஜலதோஷம் ,தலை பாரம் என்று வளர்ந்து காய்ச்சலில் முடிகிறது ! ஷாம்பூ மற்றும் சீயக்காய் தூள் மூலம் இதனை களையலாம் , ஆனால் ஷாம்பூவில் உள்ள ரசாயனங்கள் உகந்ததல்ல . எண்ணை தடவிய பின்னர் ....சீகைக்காய் தூள் குளியலே சாலச் சிறந்தது ! வெறுமனே தலை குளிக்கும் போது , நீர் முழுதும் போகாமல் மண்டையிலேயே தங்கி...தலை பாரம் போன்றவை ஏற்படும் ! இந்த அடிப்படையின் மூலமே நான் சரி செய்துக் கொள்வேன், மருத்துவரிடம் வெறுமனே மாத்திரை வாங்கி மெல்லாமல் ! சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ .... கண்டிப்பா காய்ச்சலை விரட்டும் !

முன்பெல்லாம் அக்குள் முடியை கடையிலேயே எடுப்பர் .... சிகை கலைஞர்கள் முகத்தை பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கும் ....இருப்பினும் வேறு வழியில்லை என்று ...கையை தூக்கிக் கொண்டு அவரிடம் காட்டும் போது .....ஏதோ நிர்வாணமாக நின்றுக் கொண்டு காட்டுவது போல் ....வெட்கமாக இருக்கும் ! இப்போதெல்லாம் எங்குமே அவ்வாறு செய்வதில்லை என்று நினைக்கிறேன்...நல்ல விஷயம் ! அக்குள் முடி எடுத்தல் மிக அவசியமான ஒன்று ....வியர்வை மிக அதிகம் சுரக்கும் இடமது....உடனுக்குடன் துடைத்து விடல் அவசியம்.அதுவும் ரோமம் அதிகம் இருந்து ....காயாமல் இருந்தால் ... நிச்சயம் சளி பிடிக்கும் ! குளித்த பிறகு ...நாம் அங்கு துடைக்க மறந்து விடுவோம் .... அது தான் பிரச்சனை ! ரோமம் அங்கு நீக்கி இருந்தால் .... இந்த பாதிப்புகள் பெருமளவு குறையும் ! சாதாரண அக்குள் பிரதேசம் ...ஏன் ஒரு காமக் குறியீடு ஆனது என்று உங்களுக்கு தெரியுமா....யோசித்துப் பாருங்கள்.... ஆங்...அதான் விஷயமே !

அந்தக் காலங்களில் இந்த முடிகளே வேறொரு மிக முக்கியப் பயனையும் பெற்றுள்ளது ! சுத்தமாக குளித்து முடித்த பின்னர் அந்தப்புர பெண்கள் .... அகில், சந்தனம் போன்ற வாசனை பொருட்களை தூபத்தில் கலந்து புகை போட்டு ஒரு சட்டியில் பரப்பி .... அதை இரண்டு கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு ....அணிந்திருக்கும் பாவா டையால் மூடி விடுவர்.....அந்த சுகந்தப் புகையானது 'உள்ளே' சென்று ....எங்கும் வியாபித்து ... ரோமங்களில் படிந்து தங்கி விடும் ! அந்த சுகந்தம் 'உள்ளேயே ' இருப்பதால் .... காற்றில் கலக்காமல் ....நாள் முழுதும் நறுமணம் வீசிக் கொண்டே அரசனை பித்தத்தில் ஆழ்த்தும் ! வாத்ஸ்யாயனரின் காமசூத்ராவில் படித்தது !

நாம் ஆப்பிரிக்க வம்சாவழியினர் என்ற ஒரு கூற்றை நிரூபிப்பது போல் என் நண்பனொருவனின் சிகை இருக்கும்,எப்படி என்றால் சிகை கலைஞர் அவனின் சுருள் சுருள் முடிகளை ...சுருள் நீக்கி ,வெட்டி.... கை ஓய்ந்து போய் ....அவ்வப்போது ..கத்திரியை முடியிலேயே சொருகி விடுவார், அதுவும் அப்படியே தொத்திக்கிட்டு நிற்கும் ! அவ்வளவு நெருக்கமான சுருள் சுருள் ! இவனுக்கு சாவும் வரை சொட்டையோ , நரையோ கிடையாது என்று என் சித்த நண்பன் சொல்வார் !

எனக்கெல்லாம் பள்ளி பருவத்திலேயே நரைக்கத் தொடங்கி விட்டது , காய்கறி, கருவேப்பிலை என்று அனைத்தையும் நான் ஒரு பிடி பிடித்தேன் என்றாலும் , ஒன்றிரண்டு தட்டுப்பட்டுக் கொண்டு தான் இருந்தன ! பல களப்பணிகள் புரிந்த பிறகு, இது என் தந்தை எனக்குக் கொடுத்த முதல் சொத்து என்று தெரிந்துக் கொண்டேன், ஆம்...அவருக்கும் இள நரையாம் ! இதில் ஒரு பெரிய வசதி,சிறு வயது முதல் இதில் பழகி விடுவதால் .... வயதான பிறகு ஏற்படும் நரைக்கு மற்றவர் போல் கவலையிராது ! ஆனால் முன்பெல்லாம் என் தந்தை , மிக பிரமாதமான முறையில் டை அடித்துக் கொள்வார் .... ஒரு யாகம் போல் முதல் நாள் இரவில் இருந்து நிதானமாக தடவ ஆரம்பித்து , பின் காலையில் ஒரு முறை 'பட்டி' அடித்து நிகழ்ச்சிகளுக்கு செல்வார் ! பார்ப்பவர்களெல்லாம்," இன்னும் அப்படியே இருக்கீங்க", என்று விளம்ப ... விளம்ப ஒரே பூரிப்பில் இருப்பார் ! உண்மையிலேயே அவருக்கும் நன்றாக 'செட்' ஆகி விட்டது .... அதீத உழைப்பாளியாதலால் அளவான உடலுடன் மிக இளமையாக தெரிவார் ! எப்படி என்றால் எங்கள் இருவரையும் பார்த்து சகோதரர்கள் என்றோ.....சிலர் ஒரு படி மேலே போய் , நான் அவரின் அண்ணன் என்றும் கூறுவர் ! முடி வெளுத்திருந்தா பெருசு....கருத்திருந்தா சிறுசா ?.. அட பாவிகளா !

நான் செயற்கை பூச்சுகளை பூசுவதில்லை , எவ்வளவோ பேர்கள் சொல்லியும் நான் செய்வதில்லை . எனக்கு இந்த நரை ஒரு வசதியாகத் தெரிந்தது , அதாவது என்னை விட பெரியவர்கள் கூட என்னை 'பெரியவன்' என்று நினைத்து மரியாதையுடன் அழைப்பது , சில சமயம் "அண்ணே " என்றும் அழைப்பது.முக்கியமாக எனது அலுவலக பணிகளில் நிறைய பொதுமக்கள் , முக்கியஸ்தர்கள் , உயர் அதிகாரிகள் போன்றவர்களுடன் 'பஞ்சாயத்துக்கள்' நடைபெறும். 'மீடியேட்டர்' போன்ற என் பணிக்கு இந்த நரை ஒரு வரப்பிரசாதம் . பிரச்சனையின் வீரியம் மிக அதிகமாகப் போகும் போது ... "தம்பி கொஞ்சம் பேசாம இருப்பா ", என்று என்னை விட பெரியவர்களை கூட கொஞ்சம் அடக்குவதற்கு ஏதுவாக இருக்கும் !

"வயது ஏற...வயது ஏற ஒரு முதிர்ச்சியுடன் இருப்பதே அழகு , அந்தந்த வயதுக்குரிய வாகும் , நரையும் , உடல் மொழியும் முக்கியம் . அதை விடுத்து பேத்திகளுடன் "பல்லேலக்கா".. ஆடிக்கொண்டிருக்க , நாம் திரைப்படங்களிலா நடித்துக் கொண்டிருக்கிறோம் ? ", மேற்கண்ட டயலாக்கை நான் தத்துவார்த்தமாக என் உறவினர் ஒருவரிடம் உதிர்த்துக் கொண்டிருந்த போது என் தந்தை கேட்டு விட்டார் ! அவர் 'பல்லேலக்கா' எல்லாம் ஆட மாட்டார் என்றாலும் அதன் பிறகு டை அடிப்பதை நிறுத்தி விட்டார் ! நான் அவருக்காக கூறவில்லை என்று சொல்லி ...நானே வாங்கிக் கொடுத்தும் ,இன்று வரை 'டை ' போடவில்லை ! இப்போது நரைத்த முழு தாடி மீசையுடன் .... கிட்டத்தட்ட எழுத்துச்சித்தர் பாலகுமாரன் கெட்டப்பில் இருக்கிறார் ! எனக்கே இப்போது அவர் மேல் பயம் கலந்த மரியாதை வருகிறது .... இப்போதெல்லாம் எதிர்த்து பேசுவதில்லை ! அப்பாவை இளைஞர் என்று துதி பாடிய கோஷ்டி இப்போது போய் ....வேறொரு பஜனை குழு வந்து விட்டது ..... கோயில் , பூஜை புனஸ்காரம் எல்லாவற்றிற்கும் ..... அப்பாவின் தலைமையில் தான் ! ஆகையால் என் டயலாக் சரிதான் என்று இப்போது அவரும் உணர்ந்திருப்பார் ! ஆனால் இப்போது எனக்கு என்ன நடந்ததென்றால் ..... என் பாசமிகு தோழி , இயற்கை முறையிலான ....மருதாணி தழைகள் கலந்த ஒரு களிம்பு கொடுத்திருக்கிறார் .... அதன் உபயத்தில் அவ்வப்போது மட்டும் , நான் சற்று செம்பட்டை தலையனாக ....கருப்பு கிடையாது ...ஹீ ...ஹி !

செமம்பட்டை முடி என்றதும் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது.... ஒரு நாள் என் நண்பன் ஒருவன் வேகமாக என் வீட்டிற்கு வந்தான்...அவன் முகத்தில் ஒலிம்பிக் ஜோதி பிரகாசம் ... கையில் ஒரு பாலித்தீன் கவர் !

"என்னடா ?"

"மாப்ளே ... சாதிச்சிட்டேண்டா ... கையோட கொண்டு வந்துட்டேன்டா ! "

எனக்கு ஒன்றும் புரியவில்லை "ரஜினி ராமு " என்று தனது தலைவன் பெயரை இனிஷியல் போல் வைத்துக் கொண்டு திரியும் இந்த 'வெறி ரசிக' நண்பன் சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று இப்போது தான் வருகிறான். சரி அவன் தலைவரோடு பேசி ,புகைப்படங்கள் இத்யாதிக்கள் நடந்திருக்கும் , அதில் நெகிழ்ந்திருக்கிறான் என்று எண்ணி ... அவனை ஆசுவாசப்படுத்தினேன். அவன் மெல்ல கையில் உள்ள பாலித்தீன் கவரைப் பிரித்துக் காட்டினான் . உள்ளே ஒரே ஒரு செம்பட்டை முடி ! நான் கேள்வியுடன் பார்க்க ... அவனோ ," பார்த்தியா ...தலைவரோட மயிரு , கூட்டத்துல அடிச்சி பிடிச்சி புடுங்கிட்டோம்ல ", என்று பெருமையாக சொன்னான்.இது போன்ற 'மயிர் ரசிகர்களை' வைத்திருக்கும் ,அந்த தலைவனை நினைத்து எனக்கு பரிதாபம் தான் தோன்றிற்று. யாருக்கு வேண்டுமானாலும் தலைவனாயிருக்கலாம் , இந்த திரையுலக தலைவர்களாய் இருப்பதன் ஆபத்து புரிகிறது ! என் நண்பன் கலந்துக் கொண்ட அந்த தள்ளு முள்ளு நிகழ்ச்சியில் , நடிகருடைய காது வளையமும் ஒரு ரசிக கண்மணியால் பிடுங்கப்பட்டு .... படத்தின் continuity பாதிக்கப்பட்டது என்று பின்னர் செய்தியில் கூட படித்தேன் . ஆனால் இந்த மயிர் பிடுங்கல் நிகழ்ச்சி பற்றி நடிகர் எதுவும் சொல்லவில்லை ... "நல்ல வேளை ...காது வளையத்தை கழட்ட முடியாமல் ... காதோடு அறுத்து எடுத்துப் போகாமல் விட்டானுங்களே ", என்று மயிர் சமாச்சாரத்தை சொல்லாமல் விட்டிருப்பார் என்று நினைக்கிறேன் ! ராமுவின் ஏனைய ரசிக நண்பர்கள் மிக கடுமையாக அவனிடம் கோபித்துக் கொண்டனர் , " ஒரு கொத்தா புடுங்கி இருந்தா ...எங்களுக்கும் கிடைச்சி இருக்கும் இல்லே....நீ ஒரு சுய நலவாதிடா !."

Perfume என்கிற பிரெஞ்சு படத்தில் ,நாயகன் உலகின் தலைச்சிறந்த..... அற்புத வாசனை திரவியத்தை தயாரித்து வைத்திருப்பான் ... அவனை தூக்கில் போட ஊரே திரண்டிருக்கும் ... அவன் சில துளிகள் மட்டும் அந்த திரவியத்தை கைக்குட்டையில் தெளித்து , பின் காற்றில் வீசுவான் . அவ்வளவு தான் ... அந்த சுகந்தத்தில் கவரப்பட்டு அனைவரும் அவனுக்கு அடிபணிவர் . பின்னர் ஊரே ஓ ... ஸாரி உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும்.... அருகிலிருப்போரோடு ! இறுதி ...க்ளைமாக்ஸில் நாயகன் மனம் வெதும்பி , வாசனை திரவியத்தின் முழு புட்டியையும் தன் மேல் ஊற்றிக் கொள்வான் ... சில துளிகளுக்கே அப்போது அப்படி நடந்தது .... பல நூறு துளிகள் என்றால்....என்னாகும்?? அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் நஞ்சு ! அவன் அணிந்திருந்த துணியின் கிழிந்த சில துண்டுகள் மட்டுமே இறுதியில் பார்க்க முடியும் !! இது அந்த பட நாயகன் விரும்பி ஏற்கும் முடிவு...நம் நிஜ நாயகர்கள் ??? எல்லாவற்றையும் இணைத்துப் பாருங்கள் ஒரு பின்நவீனத்துவ கூற்று புரியும் !

காதலிக்கும் போது ....காதலியின் முடி கூட மிக்க அழகாகத் தோன்றும்... எனக்கும் தோன்றியது ! அவளிடம் கேட்டேன் ...அவளும் அனுப்பி வைத்தாள் .எப்படி தெரியுமா...அவள் உபயோகித்த சோப்பில் சுற்றி ...சுற்றி ..ஓட்ட வைத்து ...அதை கவர் இட்டு அனுப்பி இருந்தாள் ! ஸ்மார்ட் ! ஆனால், பின்னர் இன்னும் நெருக்கமாகி விடும் போது ...அடுத்த கட்ட நடவடிக்கையில் ... முடி பிடிப்பதில்லை ! இப்படித்தான் ஒரு முறை முகத்தோடு முகமாக நெருங்கி முத்தமிடும் தருணத்தில் ... ஒரு கொத்து சிகை என் முகத்தில் பட்டதும்...கடுப்பாகி...முகத்தை சுளித்து அசிங்கமாக ."..ச்சே ", என்று விட்டேன் ! எனக்கே என்னை பார்க்க ஆளவந்தான் - நந்து மாதிரி தோன்றியது ! அவள் முகம் சிவந்து " அவ்வளவு அருவருப்பாயிருக்கா ....அப்ப கண்டிப்பா நான் கொடுத்த சோப்பு - சிகை உன்னிடம் இருக்காது", என்று சரியாகச் சொல்லி விட்டாள் ! நான் பயந்து போய் ,''அய்யயோ ...அப்படி எல்லாம் இல்லை ..என்று சொல்லி சமாதானமாக்கி ....பிற்பாடு அதே போன்ற சோப்பை வாங்கி ...கரைத்து சிறிதாக்கி....அதே அளவு முடியையும் ஒட்டி ... காட்டி தப்பித்துக் கொண்டேன் ! முத்தம் கூட அலுத்து விடுமோ .... அப்புறம் அதுவும்.... எல்லாம் தாண்டி ...உண்மையான ' மெய்யறிவை ' நோக்கிச் செல்வேன் என்று நினைக்கிறேன் !

ஒரு முறை பாண்டிச்சேரி அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் நான் முன்பு குறிப்பிட்டிருந்த சுருள் முடி நண்பன் வேலையில் இருந்தான் .அவனை பல முறை தொடர்ப்பு கொள்ள முயன்றும் முடியவில்லை , பின் ஒரு வழியாக அவன் தங்கியிருந்த தவலகுப்பத்திற்க்கு சென்று காத்திருந்தேன் . அவன் வேலை முடிந்து வந்ததும் "ஏண்டா ..வேலை கிடைச்சதும் சுத்தமா மறந்துட்டியா ... என்ன நினைச்சிக்கிட்டிருக்கே ? ", என்று சத்தம் போட்டேன்.அவன் தணிந்த குரலில் "ஸாரி மச்சி .... Factory ல வேலை கடுமை...அதான் ..!"

நான் " என்ன பெரிய மயிரு Factory "! , என்றேன். உடனே அவன் முகம் மலர்ந்து " மச்சி ...அது உண்மையிலேயே மயிரு பாக்டரி தான்டா ! ", என்றான்.ஆம் அது 'பரோட் கெம்' என்கிற தொழிற்சாலை . தலை முடி தான் மூலப் பொருளே ! திருப்பதி மற்றும் முக்கிய தளங்களிருந்து லாரி லாரியாக வருமாம்.அவற்றை அடர் அமிலங்களில் ஊற வைத்து ...பின் .. பல்வேறு Process க்கு பிறகு அதிலிருந்து Protein பிரித்து எடுப்பார்களாம் . மயிர் என்று சாதரணமாக திட்டி விடுகிறோம் , ஆனால் அதில் நம் உடல் வளர்ச்சிக்கு மிக முக்கிய சத்தான புரதம் இருக்கிறது !

எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு சிப்பந்தியின் தந்தை சில சமயம் கடைக்கு வருவார், சிப்பந்திக்கே வயது 40+ இருக்கும் , ஆனால் அவர் தந்தையோ மிக இளமையாக ... ஒரு முடி கூட நரைக்காமல் இருப்பார் ! கிராமத்தில் வசிக்கும் அவருக்கு 'டை' அடிக்கும் வாய்ப்பும் கிடையாது , அது மட்டுமின்றி அதற்கெல்லாம் செலவு செய்யும் மனிதர்களும் அவர்கள் கிடையாது ... பின்னே எப்படி என்று பல்வேறு களப் பணி விசாரணைகளுக்குப் பின்னர் கண்டுபிடித்து விட்டேன் ! அவருக்கு தினமும் மதியம் மீன்குழம்பை மட்டுமே பல்லாண்டுகளாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாராம் !.. , நமக்கு சாம்பார் போல் அவருக்கு எப்போதும் மீன் குழம்பு தானாம் ! வீட்டில் மற்றவர் என்ன சாப்பிட்டாலும் இவருக்கு மட்டும் ஒரே ஒரு மீனை போட்டாலாவது குழம்பு வைக்க வேண்டுமாம், இல்லாவிடில் ரகளை தானாம் ! கடைக்கு மீன் வராத தினங்களில் இவரே , ஆறு குளம் சென்று பொடி மீன்களையாவது பிடித்து வருவாராம்.மழை , புயல் போன்ற இயற்கை சீற்ற நேரங்களில் மட்டும் மீன் குழம்பு கிடையாதாம் .... ஆனால் இது போன்ற சமயங்களுக்கு உபயோகிக்க ... என்று பானையில் போட்டு வைத்திருக்கும் கருவாடை வைத்து கருவாட்டுக் குழம்பு செய்யப்படுமாம் !

இந்த மீன் மேட்டர் தெரிந்த பிறகு , கடற்கரை கிராமம் ஒன்றில் வசிக்கும் என் நண்பன் ஒருவனின் நினைவும் .... ஒரு சம்பவமும் ஞாபகத்திற்கு வந்தது ! விருந்தோம்பலில் கலக்குவார்கள் அவனும் அவன் குடும்பத்தினரும் ! நாம் போன உடனே Starters ஆக ஒரு தட்டு நிறைய எறால் வறுவல் வைப்பார்கள் ! அப்புறம் மீன் , நண்டு போன்ற குழம்பு... வறுவல்கள் வேறு தனியாக..! நாம் தாளித்து... கருவேப்பிலையை வாசனைக்கு போடுவது போல் அங்கு எல்லாவற்றிலுமே எறால் சேர்ப்பார்கள்....முட்டைகோஸ் பொரியல் , ரசம் , வெண்டைக்காய் கூட்டு என்று அனைத்திலுமே கடலுணவு சேர்த்து தான் ! அந்த பகுதி மக்களுக்கு சற்று செம்பட்டையாகத்தான் தான் முடி இருக்குமேயொழிய ... அதுவும் ஒரு அழகாகத் தான் இருக்கும். மிக அரிதாகவே முடி நரைத்த பெருசுகளை பார்க்க முடியும் !

ஒருமுறை என் பெண் தோழிகள் அவரவர் காதலரோடு அந்த கடற்கரை கிராமத்திற்கு வந்திருந்தனர்...வந்தவர்கள் நண்பனின் விருந்தோம்பலில் நெகிழ்ந்து அவனை பாராட்டித் தள்ளினர்.அதிலும் அந்த 2 பெண் தோழிகளும் நண்பனின் சிகையை கைகளால் கோதியவாறே "ஹௌ சாப்ட் & ப்ரௌனி ", என்று கொஞ்சியதை பார்த்து அவர்களின் காதலர்களே நெளிந்தனர் ! நண்பனும் உச்சா குளிர்ந்து மேலும் சேவையை தொடர்ந்தான் . ரொம்ப குஷியாகி ஒரு மிகப் பெரிய ஏற்பாடொன்று செய்தான் . படகு மூலம் , ஒரு மனித சஞ்சாரமற்ற தீவிற்கு எங்கள் அனைவரையும் அழைத்து சென்றான். அற்புதமான இடம் , அழகிய கடற்கரை .... கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித நடமாட்டம் இல்லை .... Discovery இல் வரும் Private பீச் போல ! ஜோடிகளை தனியே அனுப்பி விட்டோமென்றாலும் .... பாலைவனம் போல வெகு தூரம் வரை மணலாகவே இருந்ததால் ஜோடிகளால் ஒதுங்கவும் முடியவில்லை ! பின் கொண்டு வந்த உணவுகளை பிரித்து சாப்பிட்டு முடித்ததும் தான் ஒரு பிரச்சனை ஆரம்பமாயிற்று.

வந்திருந்த பெண்கள் இருவருக்கும் ச்சூ ..ச்சூ .. அவசரம்..... உடனே போக வேண்டும் என்றார்கள்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மறைப்பு கூட இல்லை, கிராமத்திற்கு திரும்பி செல்லவும் ஒரு மணி நேரம் ஆகும்.சரி , கடலில் இடுப்பளவு ஆழத்தில் நின்றுக் கொண்டு சுதந்திரமாக விடுங்கள் என்றேன் (What an idea sirji !) .ஒருதோழி மட்டும் கருத்தை கச்சிதமாக கவ்விக் கொண்டு முடித்து விட்டார்,இன்னொருவரோ கெண்டைக்கால் ஆழத்திற்கே பதறி ஓடி வந்து விட்டார்.கூட துணைக்கு அவள் காதலரையும் போக சொன்னாலும் உடன்படவில்லை.என்ன செய்யலாம் என்று சுற்றும் முற்றும் பார்த்த போது , தூரத்தில் முள் குத்துச் செடிகள் அரை ஆள் உயரத்தில் சிறிய புதராக காட்சியளித்தது , எதேஷ்டம்.... என்று அதை நோக்கி போக ஆரம்பித்தோம்.அந்த புதருக்கும் பின்னால் போய் குந்திக் கொண்டால் ....செவ்வனே மறைத்து வேலை முடிக்கலாம் என்று புரிந்தது ! புதருக்கு பின்னால் சென்றதும் தோழி ' "எல்லோரும் திரும்புங்கடா " என்றாள்.இன்னொரு தோழியும் பாதுகாப்பு அரணாக அவளருகில் நின்றுக் கொண்டாள்.ஏனைய நாங்கள் கடலை பார்த்து திரும்பிக் கொண்டோம் .... காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது !

"ஐயோ ", என்றொரு கூக்குரல் வந்ததும் சட்டென்று திரும்பினேன்.திரும்பிய என் பார்வை கோணத்தில் நேராக 'அதுவா ' தெரிய வேண்டும்?! புதருக்குள் புதர்... தேனடை .. நல்லரவின் படம் கொண்ட ......என்றெல்லாம் மனதில் வேகமாக வரிகள் ஓடியது ... இப்படியே ஓரிரு வினாடிகள் ஓடி சற்று தாமதமாகவே கண்களை விலக்கினேன் . மற்றவர்களை விட நான் சற்று வேகமாக திரும்பியதன் விளைவு...அந்தக் காட்சி.. ! மற்றவர் பார்ப்பதற்குள் ஜீன்ஸை பூட்டி விட்டாள் ! காற்று வீசியதில், முள் செடி ஆடி...அவள் தொடையில் குத்தி விட்டதாக சொன்னாள் ! நான் மட்டும் பார்த்ததை அவள் கவனித்து விட்டாள் என்று எண்ணி மனம் சங்கடப்பட்டது...எங்கே என்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று படபடப்புடன் நடந்து வந்தேன்.அவளின் காதலனுடன் இருக்கும் போது கூட மிக சகஜமுடனேயே என்னிடம் பேசுவாள் இருந்தாலும் ... இந்த விஷயத்தில் என்னாகுமோ என்று யோசனையுடன் விலகி நடந்தேன்.அனால் அவளோ எல்லோரையும் விட்டு என்னருகே வந்தாள் , "ஏய் ,ஸ்ரீ ".., என்றாள் ...அவள் முகம் பார்க்கவே எனக்கு பயமாக இருந்தது ,குனிந்தவாறு "..ம் ", என்றேன். தோழி சற்று நெருங்கி வந்து ,என் காதில் , "என்னடா .... செம சீனா ? ", என்றாள் !

பி.கு: 1 வாரமா காய்ச்சல் மற்றும் நீர் கோர்த்தலால் அவதிப்பட்டு ...சரியாகி வரும் வேளையில் அதைப் பற்றி பதிப்போம் என்று உட்கார்ந்தால்....பாருங்கள் பதிவு எங்கெங்கேயோ சென்று விடுகிறது.ஆனால் ஒன்று ....எங்கெங்கோ திரிந்தாலும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து விடுகிறது ! அம்மட்டில் சந்தோஷமே !!
ஊரில் என் பாட்டியிடம் யாரவது வந்து அவர்கள் பிரச்சனையை சொல்லி புலம்பிக் கொண்டிருப்பர்...பாட்டி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே "ஒக்... ..ழி , உன் கதை என்னடா ஒரே மயிரு புராணமா இருக்கு", என்பார் !

சிகைப் பதிப்பு படலம் 'முடி' ந்தது !