Tuesday, 2 October 2012

Gandhi Jayanthi !











காந்திஜியை பற்றி ஆயிரமாயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் .....ஒரே ஒரு விஷயத்திற்காக  நாம்...இல்லை நான் மதிக்கும் விஷயம் , உலக அளவில் நம் இந்தியாவின் குறியீடாக விளங்கும் ஒரு தலைவர் அவர் !. வெளிநாடுகளில் கூட  ருபாய் நோட்டிலும் , தபால் தலையிலும் , சிலைகளாகவும் நிறுவப்பட்டவர் ! இந்தியாவின் icon ஆக அவர் திகழ்வதில் இந்தியனாக எனக்கு உள்ளூர ஓர் மகிழ்ச்சி ..! ஒரு பழைய கட்டுரையில் கூட .... பாகிஸ்தானில் ஒரு இளைஞர் காந்திஜியின் புகைப்படத்தை தன் பணப்பையில் வைத்திருந்ததை அறிந்து ஆச்சரியமடைந்திருக்கிறேன் ! ஏனைய தலைவர்களை காட்டிலும் உலகளவில் ஒரு ஆளுமையுடன் இருந்த இந்திய தலைவராக இவர் கருதப்படுகிறார் ... இன்றும் இதை .... Aung San Suu Kyi மூலம் அறிகிறோம் !
ஆனாலும் இங்குள்ளோரே...நாமே  இவரை மிக கடுமையாக சாடுகிறோம் , அது உலகளவில்  இவருக்கு உள்ள நற்பெயரை ...நமக்கு எதிரான நாடுகளுக்கு நம்மைப் பற்றிய தவறான கருத்துகளை பரப்ப  இடமளித்து விடும் ! இவரை நாம் விமர்சனம் செய்யலாம் ..தவறொன்றுமில்லை ...ஆனால் இவரே தனது வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக "சத்திய சோதனையில் " கூறியுள்ளார் ..என் வாழ்க்கையே உங்களுக்கு ஒரு செய்தியென்று ! இன்று பெரும்பான்மையோர் காந்திஜிக்கு எதிராக கூறும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ..அவர் ஏற்கனவே அந்த புத்தகத்தில் கூறியிருந்தவை தான் ! அவர் ஒரு பெண் பித்தர்...எப்போதும் பெண்கள் அவர் கூடவே இருப்பார்கள் ..இது போன்று பற்பல..உண்டு . ஒரு விஷயம் சொல்கிறேன்...யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ...' பக்கத்து அறையில் அவரது தந்தை தனது அந்திமக் காலத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது கூட....காந்திஜி தன் மனைவியுடன் உடலுறவு கொண்டதை வெட்கமின்றி ஒப்புக்கொண்டுள்ளார் ...பின்னாளில் அதற்க்கு வருத்தமும் கொண்டார் ' ! தன்னைப் பற்றி இந்த அளவு ஒளிவு மறைவின்றி வாழ்ந்த அந்த மனிதனின் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன் ! இப்படி பட்டவர்த்தனமாக அவர் சொன்னதற்க்கான காரணம், " என்னைப் போல் சராசரி மனிதனாக ... புலன்களின் இச்சையில் திரிந்தாலும்...அவனும் ஒரு நல்ல ஆத்மாவாக மாற முயலலாம் " என்பதற்கான ஒரு காரணியாகவே இருக்கும் என்றே நான் கருதுகிறேன் ! அவரைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்....நீங்கள் அவரை விமர்ச்சிக்கும் முன் அவரை முழுதும் படியுங்கள்...குறைந்தபட்சம் அவரது "சத்திய சோதனை " மிக குறைந்த விலையில் கிடைக்கிறது ....அதையாவது ...படித்து விட்டு விமர்சியுங்கள் ! அவர் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் அல்ல ....மனிதராக பிறந்த எல்லோருக்குமே  ஒரு சில குறைகளாவது இருக்கும்....அப்போது தானே அவன் மனிதன் .... குறையே இல்லையென்றால்...அவன் தேவன் ...அல்லது கடவுளாகி விடுவானே ! எனக்கும் காந்திஜியின் ஒரு சில கருத்துகளில் உடன்பாடில்லை தான்...உதாரணத்திற்கு....'தற்காத்துக் கொள்ளக் கூட முயலாமல் அடி வாங்கியே இறந்து போன திருப்பூர் குமரன் .... இவரது உறுதியான மனதை உபயோகித்து இறந்து போனதை விட...இன்னும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு (அது அவரது முதல் போராட்டம் என நினைக்கிறேன்)...இன்னும் உரமேற்றியிருக்கலாம் ...ஏன் இவரே எதிர்காலத்தில் ஒரு தலைவனாக உருவாகியும் இருக்கலாம் ! அது போல 'ஜாலியன் வாலாபாக் படுகொலை'...நூறு பேர்கள் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை குருவி சுடுவது போல் சுட்டுக் கொன்றார்கள்......இங்கு அஹிம்சை என்பது.....????

பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திஜி காரணம் என்பது போல ஒரு தவறான தகவல் இங்கு பேசப்படுகிறது...உண்மையில் பிரிட்டிஷாரின் ராஜதந்திரம் அறிந்து ..காந்திஜி அப்படிப்பட்ட பிரித்தாளும் கொள்கையுடைய சுதந்திரம் நமக்கு தேவையேயில்லை என்று கடுமையாக எதிர்த்தவர் ! ஏனைய நமது தலைவர்கள் மற்றும் ஜின்னா அவர்களின் வற்புறுத்தலின் பேரில் பிறகு 'துண்டாடப்பட்டது'...ஆம்...உயிருடன் இருந்த ஒரு தேசத்தை பிரித்ததை இப்படித்தான் சொல்லவேண்டும் ! ஆனால் பின்னாளில் ஜின்னா அவர்கள் இதற்க்கு மிக வருந்தியதாக கேள்விப்பட்டதுண்டு ! தீர்க்கதரிசனத்துடன்  யோசித்தவர்  காந்திஜி ...
நண்பர்களே ...இவரை நாம் மதிக்கிறமோ ..இல்லையோ...நம் நாட்டின் ஒரு தலைவரை இன்று உலகமெங்கும் போற்றும் அந்த மக்களை மதித்து ....நாமும் வணங்குவோம்..! We may criticize Gandhiji but should not avoid him !
###########################################################################
we may criticize Gandhiji but should not avoid him ....

மேற்கண்ட வரியை டைப்பி கொண்டிருக்கும் போது சட்.... சட்டென்று சாருஜியின் நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டேன்....என்னவோ...என்னவோ... ஒரே...மாதிரி....என்ன இது...என்று யோசித்து ..பின்....

வழக்கம் போல் நண்பனிடம் காட்டி படிக்கச் சொன்னேன்...நண்பனும் பார்த்து விட்டு, " நல்லாருக்கு ...இதுக்கு நீ ட்ரீட் வைக்கணும்...ஆறு மணிக்கு மேல ........ஹோட்டல் பாருல சரக்கு கிடைக்குதாம் ..போலாம் வா...!"

வாழ்க பாரதம் !  

No comments:

Post a Comment