Saturday, 11 August 2012

கல்லூரி காலத்தில்..!


கல்லூரியில் பயின்ற நாட்களில் , கடைசி தேர்வு முடியும் அன்று மிகப் பெரிய கொண்டாட்டமாக எங்களுக்கு இருக்கும்.அன்று இரவு ஹாஸ்டல் , Dayscholar என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் விடுதிக்கு வரவேற்கப்படுவர் ! ஆனால் ஒவ்வொருவரும் கட்டாயம் ஒரு சரக்கு எடுத்து வரவேண்டும். ஏழை மாணவர்களாக இருந்தால் ஏதேனும் நொறுக்கல்கள்... சாப்பாட்டுக்கு ஏற்கனவே வார்டன் மூலம் 'சிறப்பு அனுமதி' ( ஜானி வாக்கர் gift ..! ) பெற்று அறைக்கே எடுத்து வந்து விடுவோம்...7 மணியிலிருந்து ஒவ்வொருவராக சேர ஆரம்பிப்போம் ...1 கேஸ் பெட்டி பீர் கொண்டு வரும் 'பந்தா' நண்பர்கள் முதல் 1 /4 சரக்கை 3 பேர் கஷ்டப்பட்டுக் கொண்டு வரும் 'எத்தியோப்பிய' நண்பர்கள் வரை கூடி விடுவர்.. ஆனால் அந்த வேற்றுமையை யாரும் பெரிதுப் படுத்தாமல் மகிழ்ச்சி ஒன்றே குறியாக இருப்போம்... இனிமேல் தான் படமே...!
விடுதியிலையே பெரிதாக இருக்கும் வாளி ஒன்றை எடுத்துக் கொள்வோம் ..பெரும்பாலும் குளியலறையில் இருந்து தான் கிடைக்கும் .. அதன் கூட 4 - 5 mugs . பிறகு ஆளாளுக்கு கொண்டு வந்த சரக்குகள் அனைத்தும் ..ஒவ்வொன்றாக திறந்து அதில் கொட்டப்படும். பீர் , பிராந்தி , விஸ்கி ,ரம் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அதில் கொட்டப்படும் ...Gentle ஆக 'தனிமை சுகம்' காண சரக்கை ஒளித்து வைத்து இருக்கும் நண்பனிடமிருந்தும் கதற கதற பிடுங்கி ஊற்றப்படும்..பின் அந்த அற்புதக் 'கலவையை' (wild cocktail ?) mug மூலம்
டீ ஆற்றுவது போல் ஆற்றப்படும் ...அப்பொழுதே அன்றைய கலவையின் மகத்துவம் தெரிந்து விடும்.., நுரை அதிகமாக இருந்தால்..அது கொஞ்சம் 'தமாஷ் ' சரக்கு..(பீர் உபயம் அதிகம்)., ஆனால் நுரை சற்று குறைந்தோ .அல்லது மிகக் குறைந்தோ இருந்தால் ..."ராஜ சரக்கு!". ஒவ்வொருவரும் கையில் வைத்துள்ள டம்ளர்,கப்..என்று இன்னபிற வஸ்துக்களுடன் களம் இறங்குவோம் ..அதிலும் சில senior 'குடிகள் ' பரிமாறும் mug மூலமே 'கள்' அடிக்கிற முறையில் சாத்துவார்கள். அப்படியே கலை நிகழ்ச்சிகளும் தொடங்கி விடும் .. பிடிக்காத ஆசிரியர்கள் முதல் ... 'செலவு செய்ய வைத்து டேக்கா கொடுத்த தோழிகள் ' வரை வசவுகள் சும்மா விசைகள் போலப் பறக்கும்.....அப்புறம் 'ஹிட் ஆன தமிழ் பாடல்கள் 'தூய தமிழில்' பாடப்படும்..1 % only good words ! நடு..நடுவே..மட்டும் ..மானே..பொன்மானே போல ..சில..நல்ல வார்த்தைகள் பேசப்படும் . இவ்வளவு அரங்கேறிக் கொண்டிருக்கும் நேரத்திலும் " மறக்காம சாப்பாடு சாப்டுடனும்..சாப்பிடனும் ", என்று ஞாபகமாக சில 'பொறுப்புக் குடிகள்' கடைசி வரை சொல்லிக் கொண்டே இருக்கும்., ஆனால் அந்த உணவை 4 பேர் சாப்பிட்டால் அதிகம்! அது சந்தோஷத்திலா...இல்ல 'கலவையின் ' மகிமையா ..தெரியாது ? இறுதி வரை வெறும் நொறுக்குகள் மட்டும் தான்...! இடையில் இன்னொரு விபரீதமும் நடக்கும்.."சரக்கை சமமாக பிரிச்சிகிட்ட மாதிரி நொறுக்கல்களையும்
பிரிக்க வேண்டும்", என்று ஒருவர் சொல்ல..இன்னொருவர் , " அதை வேற ஏன் தனியா வச்சுக்கணும் "என்று போதையில் தள்ளாடிக்கொண்டே.., இருக்கும் எல்லா நொறுக்கல்கள், இனிப்புகள் ("சரக்கு ரொம்ப கசக்குதுப்பா "), ..அனைத்தையும் .. கலவையில் கலந்து விடுவர் ..இப்ப கலவையே ஒரு 'கவலையோடு' இருக்கும்...அடுத்து முதல் சுற்றிலேயே விழுந்தவர் முதல் 2nd mug முடித்த வர்கள் வரை உற்சாகப்படுத்த ..full volume ல் பாட்டு போட்டு 'இரண்டாம் ஆட்டம்' ஆரம்பிக்கும்....'மப்பில்' கெத்து குறையாமல் படுத்துக் கொண்டே ஆடுபவர்களும் உண்டு..! படித்த..?அந்த 4 வருடங்களும் இப்படியே தொடர்ந்து நடந்தது...'வெள்ளந்தியாய் ' ..சந்தோஷித்த ..மறக்க முடியாத நாட்கள் அவை..!
அதே நண்பர்களை ஒருங்கிணைத்து கடந்த வாரம் "நண்பர்கள் தினம்"
கொண்டாட முடிவெடுத்தோம், அப்பொழுது நடந்த சம்பவங்கள்...இல்லை..காயங்கள்..
.அது மறக்க வேண்டியவை ..!

( +) X (-) = - .

No comments:

Post a Comment